Translate

Friday, November 22, 2013

லக்ஷ்மி சிவபார்வதி


லக்ஷ்மி சிவபார்வதி

அந்த மனிதனின் வாழ்க்கையை

கதையாக எழுத வந்தவள்தான்

அதில் ஒரு

கதா பாத்திரமாகவே மாறிபோனாள்


இசையின் கவிதை மொழி




பழைய ராகம்: நான் கிராமத்தின் ராஜாங்கம்

புதிய ராகம்: நான் நகரத்தின் துள்ளாட்டம்

பழைய ராகம்: தமிழ் திரை இசைவானில் நானோர் யுகசந்தி

புதிய ராகம்: நான் உலகமெல்லாம் சுற்றி வரும் இசை தந்தி


புதிய ராகம்: நான் சூரியன் ஆகி விட்டேன்

பழைய ராகம்: நானோ நட்சத்திரம் ஆகி விட்டேன்

பழைய ராகம்: காலத்தால் நான் முந்தி

புதிய ராகம்: இளமையால் நான் பிந்தி

எல்லாம் வல்லவன்
ஏகன் சொன்னான்:

காலத்துக்கு ஒரு நாள் நான் முந்தி

கண்ணதாசனும் வைரமுத்துவும்


Thursday, November 7, 2013

வெண்ணிலவின் கண்ணீர்

வெண்ணிலவின் கண்ணீர் என்ற தலைபிட்ட கவிக்கோ. அப்துல் ரகுமானின் கவிதையை வாசித்தபோது எனக்கு சில சிந்தனைகள் உதித்தது.அவற்றை பகிர்ந்துகொள்ளவே இந்த சிறு பதிவு.


என் அணைப்பை விட்டே
இனி சிறிது என் செல்வத்தை
உன் அணைப்பில் ஏந்தென்று
உறக்கத்தைத் தாய்ழைக்கும்
தாலாட்டு பாட்டினிலே

என்ற அந்த கவிதையில்,கவிஞர் அன்னையின் அரவணைப்பிற்கு
ஈடாக கூறியுள்ள உறக்கத்தை தாண்டியும் நம் சிந்தனை விரிகிறது.

அன்னையின் அரவணைப்பிற்கு ஈடாக உறக்கம் மட்டும்தான் இருக்க வேண்டுமா?

தாலாட்டு பாடல் இருக்க கூடாதா?
என்ற சிந்தனை கவிதையை வேறு விதமாகவும் அமைக்க நம்மை தூண்டுகிறது.