| சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் மு.மேத்தாவை சந்தித்து அவருடைய திரைபடபாடல்களை |
| நான் திறனாய்வு செய்து இருப்பது குறித்து பேசிகொண்டிருந்தேன். |
| நான் எழுதி இருந்த கட்டுரைகளை படித்து பார்த்த கவிஞர் |
| என் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்து விட்டு |
| கட்டுரைகள் குறித்து சில விளக்கங்களை என்னிடம் |
| கேட்டார். |
| ஓங்கும் உந்தன் கைகளால் வானை புரட்டி போடு |
| புது வாழ்வின் கீதம் பாடு |
| என்றுதானே எழுதிருந்தேன் |
| தூங்கும்உந்தன் கைகளால் வானை புரட்டி போடு |
| புது வாழ்வின் கீதம் பாடு |
| என்று வரிகளை குறிப்பிட்டு இருக்கிறீர்களே |
| என்று கேட்டார் |
| பாட்டு புத்தகத்தில் அவ்வாறு இருப்பதை நான் |
| சொன்னேன். |
| கவிஞரின் திரைப்பட பாடல்கள் தொகுப்பு நூல் |
| ஓன்று 1996 நர்மதா பதிப்பக நூலாக |
| வந்துள்ளது. |
| ஆனால் நான் குறிப்பிட்ட சூரிய வம்சம் படத்தில் |
| இடம்பிடித்த நட்சத்திர ஜன்னலில் என தொடங்கும் |
| பாடல் 1996 க்கு பிறகு என்பதால் அதில் இல்லை. |
| எனவே நடைபாதைகளில் விற்கும் அந்தந்த |
| திரைப்படங்களின் சிறு அச்சு நூலை நான் |
| வாங்கி இருந்தேன் |
| அதில்தான் கவிஞர் குறிப்பிட்ட இந்த பிழை |
| கவிஞரை சந்தித்து வந்த பின்பு சில நாட்களில் வேறு |
| ஒரு அச்சு பிழையை கண்டுபிடித்தேன். |
| பொன்னாடை இமயத்திற்கு போர்த்திவிடலாம் |
| என்றுதான் கவிஞர் எழுதி இருந்தார். |
| ஆனால் அந்த சிறு அச்சு நூலில் |
| பொன்னாடம் இமயத்திற்கு போர்த்திவிடலாம் |
| என்று வரிகளை பிழையாக குறிபிட்டு இருந்தார்கள் |
| திருக்குறளுக்கு நான் உரை எழுதுவது என்பது |
| இமயத்திற்கு பொன்னாடை போர்த்திவிடுவதை போன்றது |
| என்று தலைவர் கலைஞர் சொன்னதாக |
| கவிஞர் ஒரு நேர்காணலில் |
| குறிப்பிட்டு இருந்தார் |
| அந்த பாதிப்பிலேயே அந்த உவமையை கையாண்டதாகவும் |
| சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்குறீர்கள் என்று |
| கலைஞரே பாராட்டியதாகவும் கவிஞர் மேத்தா அந்த |
| நேர்காணலில் சொல்லிருந்தார். |
| அந்த நேர்காணலை படித்த போதே இதையும் |
| கண்டுகொண்டேன் |
| திரைப்படங்களில் கருத்துள்ள பாடல்கள் அமைவதே அரிது. |
| அப்படி அமைந்த நல்ல பாடலையும் அச்சு பிழை |
| செய்தே இப்படி கொலை செய்கிறார்களே என்று |
| வருந்தினேன் |
Translate
Tuesday, February 10, 2015
இமயத்திற்கு பொன்னாடை
Subscribe to:
Comments (Atom)