| 1 | ஆண்கள் எல்லோரும்
ஆணவக்காரரே ஆதிக்கம் செய்தால் |
| அவர்களை அறவே ஒதுக்கு |
| |
| |
| 2 | இல்லாளை மிதிக்கும் ஆண்மகனால் அக்குடும்பம் |
| இல்லாது ஒழிந்து விடும் |
| |
| 3 | பெண் இனத்தை பேய் என்று இழிக்கும் ஆண்கள் கூட்டம் |
| நாய்களுக்கும் இழிவாய்த்தள்ளப்படும் |
| |
| |
| 4 | பெண்ணுக்கு பெண்ணை எதிரிகளாக்கும் |
| ஆணாதிக்க உலகம் உதிரிகளாகிவிடும் |
| |
| 5 | பேராண்மை எனப்படுவது யாதெனின் |
| பெண்மையை மதிப்பதே ஆகும் |
| |
| 6 | ஆண் ஏவல் செய்தொழுகும் பெண்மையின் அவன் உறவை |
| அறுத்தெறிந்த பெண்ணே பெருமை உடைத்து |
| |
| 7 | நத்தையாய் ஆணாதிக்க கூட்டுக்குள் முடங்காதே |
| பறவையாகு சிறகை விரி |
| |
| 8 | மணப்பந்தல் முன்னிறுத்தி வரதட்சனை கேட்கும் |
| கயவனுக்கு மாலை இடாதே விலங்கிடு |
| |
| 9 | ஒடிந்தும் பின் மடிந்தும் போவார் மண்ணுலகில் |
| மனையாள் சொல் கேளாதோர் |
| |
| 10 | அகிலத்தையே வென்றிடுவாள் ஆண் சுகத்திற்காய் |
| அடி பணிந்து மயங்காதாள் |