Translate

Monday, August 19, 2013

யாரோ எழுதிய கவிதை

கவிஞர் வாலி அவர்கள் காலமானபோது யாரோ ஒருவர் எழுதிய கவிதை





வாழிய நீ வாலி ஆழி சூழ் உலக மெல்லாம்! அருந்தமிழை அருந்த வைத்து!


 


மேழியாம் எழுதுகோலால்! உள்ளங்களை உழுதவனே!


 


கோழிகளும் குயில்களைப் போல்! கூவிப் பார்க்கும் கலியுகத்தில்! ஏழிசையால் ஏறி நின்ற!


 


வாலியெனும் பாட்டரசே! ஊழித்தீ அணையுமட்டும்! உன்பாட்டு நிற்குமன்றோ! வாழிய நீ


 


பாட்டுருவில்! வாழ்வாங்கு இத்தரையில்!


 

No comments:

Post a Comment