Translate

Thursday, June 26, 2014

சுயதரிசனம்


நல்ல அமைதி வந்து 
குடிபுகும் உன் மனதில்

நல்ல மலர்களால் நிறைந்துவிடும்
உன் வீட்டு கொல்லை

பட்டினத்தான் வாழ்ந்த 
வீடு மேற்குப்புறத்தில்

பண்ணை புரத்தான்  பாட்டு
வரும் கிழக்கில் இருந்து


வெட்ட வெட்ட 
மடிந்து விழும் இலையும் கிளையும் 
வீசும் காற்றில் ஈரம் கோர்க்க
மீண்டும்  துளிர்த்து வரும்
யாருமற்ற பாலை நிலமே 
வாழ்கை என்று எண்ணிவிடாதே
சொந்தமில்லா சொந்ததில்தான் 
வசந்தம் வரும் மறந்துவிடாதே
பணத்தை வைத்து 
பிணத்தை எழுப்ப முடியாதே 
பணமே  இல்லை என்றால்
பிணம் கூட சுடுகாடு சேராதே 

No comments:

Post a Comment