Translate

Monday, May 21, 2018

அழகிய நிலவிது அருகினில் உலவுது



ஒரு தமிழ் பத்திரிக்கை நேர்காணலில் ,

இசை அமைப்பாளர் தேவா அவர்களிடம் உரையாடும் போது

திரைப்படப்பாடலின் அமைப்பு பற்றி பேச்சு வந்தது .

அந்த காலத்துல கண்ணதாசன் பாட்டு எழுதும் போது ,

 
மாம்பழத்து வண்டு

வாசமலர் செண்டு
யார் வரவை கண்டு

வாடியது இன்று

என்ற வரிகளை போன்று மிக சிறிய ,சிறப்பான வரிகளை எழுதினார்

 

அதே வேளையில் ,

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே

விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே.

 என்ற பல்லவியை போன்று மிக நீண்ட வரிகளையும்

எழுதுகிற கவிதை ஆற்றலும் அவர்கிட்ட இருந்தது .

இந்த காலத்துல அப்படி பட்ட பாடல்கள் உண்டா ?

 

          -இது நிருபரின் கேள்வி

கண்ணதாசன் காலத்து பாடல்களோடு இந்த காலத்து பாடல்களை  ஒப்பிட்டு பேச நான் விருப்பவில்லை என்றார் தேவா .

 என்னை பொறுத்தவரையில் இந்த விமர்சனத்தை ஒப்புக்கொள்ளும் எண்ணமில்லை .
கண்ணதாசனின் அடுத்த தலைமுறை கவிஞரான மு .மேத்தா அவர்களின் பாடலில் இருந்தே என் கருத்திற்கு வலுசேர்க்கும் எடுத்துக்காட்டை

பதிவு செய்ய முயல்கிறேன் .

 "மங்கை ஒரு கங்கை " என்ற திரைப்படம் .

இந்த படத்தில் இடம்பெற்ற காதல் (டூயட் )  பாடலான,



 அழகிய நிலவிது அருகினில் உலவுது  இளமனம் உருகுது இங்கிங்கே

பழகிய நினைவுகள் இமைகளில் விரிந்தன பறந்திட சிறகுகள் எங்கங்கே?

என்ற பாடலின் பல்லவி, கண்ணதாசனின் பாடல் போன்றே மிக நீண்ட வரிகளை கொண்டிருக்கிறது .

அதுமட்டுமல்ல.

இதுவரை திரைப்பாடலில் கண்டிராத சொல்லாட்சிகளான

நிலவிது, உலவுது, இங்கிங்கே, எங்கங்கே போன்ற

சொற்களை தன்னகத்தே கொண்ட தனி சிறப்பு வாய்ந்தது.






 

No comments:

Post a Comment