Translate

Sunday, June 16, 2019

மெல்லிய நூலும் அப்பளமும்

மெல்லிய நூலாய் 
நீ தனித்திராதே !

கயிறாக ஒன்றாகி 
உருவாகி முறுக்கேறு 

உன்னை அழித்திட 
யாராலும் முடியாதே !

கவிதை வரிகளை 
ஆசிரியர் உணர்வோடு 
ஒன்றி வாசித்து கொண்டிருந்தார் .


திடுமென எழுந்த 

மாணவன்  ஒருவன் கேட்டான் 


அய்யா !
நீங்கள் சொல்வது 

மெல்லிய நூலுக்கு சரிதான் 


அப்பளம் நொறுக்கினால்தானே  நல்லது 

ஒன்றாய்  இருந்து விட்டால் காற்றில் 

பறந்துடுமே ?

மாணவனின் கேள்வியால் 
விழி பிதுங்கி நின்றார் ஆசிரியர் .

No comments:

Post a Comment