| மக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த |
| சட்டமன்ற தேர்தல் அது. |
| நான்கு முனை போட்டியில் தமிழகமே பரபரப்பாகி இருந்தது. |
| தலைவர் கலைஞர் தலைமையில் தி .மு .க ஓர் அணியாகவும் , |
| அ.தி.மு.க. - ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியாகவும் , |
| ஜானகி தலைமையில் ஓர் அணியாகவும் , |
| மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் ஓர் அணியாகவும் , போட்டி இட்டன. |
| ஜானகி அணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்பொழுதுதான் |
| தொடங்கி இருந்த தமிழக முன்னேற்ற முன்னணி இணைந்து |
| போட்டி இட்டது. |
| தி. மு. க. தலைவர் கலைஞர் அவர்கள் நடிகர் திலகத்தின் |
| புதிய கட்சியை பெயரிலேயே இரண்டு முன்னேற்றமா என்று |
| தனக்கே உரிய பாணியில் கட்சியின் தொடக்க விழாவில் |
| பாராட்டி இருந்தார். |
| நடிகர் திலகம்தான் தமிழில் நாட்டிலேயே அதிக ஓட்டு |
| வித்யாசத்தில் திருவையாறு தொகுதியில் வெற்றி பெறுவார் |
| என்று ஜூனியர் விகடன் போன்ற அரசியல் பத்திரிகைகள் |
| செய்தி வெளியிட்டு கொண்டிருந்தன. |
| தேர்தலும் வந்தது. |
| முடிவுகள் வெளியாக தொடங்கின. |
| வானொலியில் செய்திகளை என் ஒட்டு மொத்த குடும்பத்தாரும் |
| கேட்டு கொண்டிருதனர் |
| பெருவாரியான இடங்களில் தி. மு. க. முன்னிலையில் இருப்பதாக |
| செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. |
| நடிகர் திலகம் தன் தொகுதியில் பின் தங்குகிறார் |
| என்று செய்திகள் வெளியாகின. |
| இந்த செய்தியை சொல்லி விட்டு , |
| ஆண்டவன் கட்டளை படத்தில் இருந்து ஒரு பாடல் தற்பொழுது |
| கேட்கலாம் என்றார் செய்தி வாசிப்பாளர். |
| அமைதியான நதியினிலே ஓடம் |
| என்ற பாடல் ஒலிபரப்பாக தொடங்கியது |
| கேட்டு கொண்டிருந்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி |
| இது தற்செயலா ? அல்லது திட்டமிட செயலா? |
| எங்களுக்கு புரியவில்லை |
| இந்த பாடல் முடிந்ததும் அடுத்த அதிர்ச்சி |
| ஜானகி எம்.ஜி.ஆர் -ம் தோல்வி அடைந்தார் என்பதுதான் அந்த அதிர்ச்சி |
| இதுக்கும் எதாவது பாட்டு போட்டுட போறாங்க ! என்று |
| என் அண்ணன் சொல்லி வாய் மூடவில்லை |
| பொன் எழில் பூத்தது புது வானில் (தி .மு .க வின் உதய சூரியன் |
| சின்னத்தின் வெற்றி முகம்) |
| வெண்பனி சூடும் நிலவே நில் |
| என் வன தோட்டத்து வண்ண பறவை |
| (எம்.ஜி.ஆர் வீடு ராமாவரம் தோட்டம் |
| மேலும் அ.தி.மு.க ஜானகி அணியின் |
| சின்னம் இரட்டை புறா) |
| சென்றது எங்கே சொல் சொல் |
| என்ற பாடல் ஒலிபரப்பாக தொடங்கியது |
| நடிகர் திலகத்திற்கு கவிஞர் கண்ணதாசனின் பாடல் |
| பொருந்தி போன அதே வேளையில் |
| ஜானகி எம் .ஜி.ஆருக்கு கண்ணதாசனின் அண்ணன் மகன் |
| பஞ்சு அருணாச்சலத்தின் பாடல் பொருந்தி போனது. |
| நடிகர் திலகம் உலக பெரும் நடிகர். |
| அவரை தமிழ் மக்கள் தலை சிறந்த நடிகர் என்று |
| கொண்டாடினார்களே தவிர அரசியல் தலைவர் |
| என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை |
| என்றெல்லாம் - |
| அரசியலை ஆய்வு செய்வோர் கூறினாலும் |
| என் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு |
| பெரும் வேதனையே . |
| ஒரு தகுதியும் இல்லாத எத்தனையோ பேர் தேர்தலில் |
| வெற்றி பெரும் வேளையில் கலை தாயின் தவ புதல்வன் |
| கலை வானின் முழு நிலவு எங்கள் நடிகர் திலகத்திற்கு |
| திருவையாறு தொகுதியில் இரண்டாம் இடம் கூட |
| இல்லாமல் நான்காம் இடத்திற்கு தள்ளிய கொடுமையை |
| என்னென்று உரைப்பது? |
| இவை எல்லாம் ஒரு புறம் இருக்க |
| நடிகர் திலகம் தன் அரசியல் தோல்வி பற்றி கூறும்போது , |
| அரசியலில் நான் தோற்கவில்லை |
| (அதாவது மக்கள் காரணமில்லை) |
| வஞ்சிக்க பட்டேன் |
| (எதிரிகளின் சூழ்ச்சி ) என்றார். |
| காலங்கள் பறந்தோடிவிட்டன |
| இப்பொழுதும் இந்த இரண்டு பாடல்களையும் |
| கேட்க நேரும்போதெல்லாம் |
| மனக்குகையில் உறங்கும் என் நினைவுகள் மெல்ல கண் விழிக்கும். |
Translate
Tuesday, November 3, 2015
அமைதியான நதியினிலே ஓடம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment