| என்
பள்ளி நாட்களில் ஒரு நாள் வானொலியில் கவிஞர் மு.மேத்தா எழுதிய "காலம் பொறந்திடுச்சு சின்ன மயிலே" என |
| தொடங்கும் பாடல் ஒலித்து கொண்டிருந்தது. |
| அந்த பாடலில், அஞ்சுகின்ற முகத்தை காண்பதற்கு ஆறுமுகம் கூட வருவதில்லை |
| நெஞ்சமெனும் அடுப்பில் நெருப்பிருக்கு |
| வஞ்சகரின் உலகில் பயமெதற்கு? |
| என்ற வரிகளை கேட்ட என் தந்தை , |
| அவரு (கவிஞர் மு.மேத்தா) பாய்
அதான் இப்படி எழுதி இருக்காரு என்று சிரித்துகொண்டே கூறினார். |
| கவிஞரின் பாடல் வரிகளுக்கு மத சாயம் பூசிய வார்த்தைகளை கேட்டவுடனேயே |
| நான் கவிஞர் .சிற்பியின் கவிதை
ஒன்றை குறிபிட்டு என் தந்தைக்கு சட்டென்று பதில் தந்தேன் |
| கவிஞர் சிற்பி தன் கவிதை ஒன்றில் இராணுவத்தினரால் பாலியல் |
| வல்லுறவிற்கு ஆளான பெண்ணின் வேதனையின் உச்சத்தை பதிவு செய்வதற்கு, |
| "அருளாளனும் அன்பாளனுமாகிய அல்லா தலை குனிந்து கொண்டான்"
என்று எழுதினார் |
| இங்கே கவிஞர் சிற்பி பாதிக்கப்பட்ட பெண்ணின் வேதனையை |
| அல்லாவால் தாங்கமுடியவில்லை என்ற பொருள் படவே அவ்வாறு |
| தன் கவிதையில் எழுதியுள்ளார். |
| அதைப்போலவே கவிஞர் மு.மேத்தாவும் அச்சம் கொள்ள கூடாது. |
| துணிந்து போராடினாலே தெய்வம் துணை நிற்கும். |
| என்ற கருத்தை பதிவு செய்வதற்கே அவ்வாறு எழுதியுள்ளார். |
| இதில் மேத்தாவை இஸ்மாயிலர் என்றோ சிற்பியை ஹிந்து என்றோ |
| அடையாள படுத்துவது அபத்தத்திலும் அபத்தம். |
| மதமேதும் இல்லாமல் இருப்பதே படைப்பாளியின் மதம். |
Translate
Monday, January 19, 2015
படைப்பாளியின் மதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment