Translate

Wednesday, January 28, 2015

பாடல்

கண்ணதாசன் மிக சிறந்த கவிஞர் . அதில் மாற்று கருத்துக்கு
இடமில்லை. அதே வேளையில் ஏனைய பிற கவிஞர்கள்
கண்ணதாசன்  அளவிற்கு  பாராட்ட படுவதில்லை.
ஆனால் இதில் வியப்பு என்னவென்றால்,



மருதகாசி அவர்கள் எழுதிய ,
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் 
ஏன் கையை  ஏந்த வெளிநாட்டில் 
 ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உ ன் மதிப்பு அயல் நாட்டில்

என்ற வரிகளோ,


புலவர் புலமைபித்தன் எழுதிய
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் 
பிறக்கையிலே 
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் 
அன்னை வளர்பதிலே


என்ற வரிகளோ,



மக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் எழுதிய,
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே
இருக்குது 
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் 
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது
என்ற வரிகளோ,



புகழடைந்த அளவிற்கு , எல்லா அரசியல் மற்றும் கலை 
இலக்கிய மேடைகளிலும் முழங்க பட்ட அளவிற்கு 
கண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந் து
கூற முடியுமா என்பது கேள்வி குறியே  

No comments:

Post a Comment