| ஒவ்வொரு பத்து வருடத்தையும் |
| வாழ்க்கை கடக்கும் தருணங்களை |
| மலை பயணத்தின் |
| கொண்டை ஊசி வளைவுகளின் |
| திருப்பங்களாக |
| உணரும் வேளையில் . . . |
| இருளில் இருந்து |
| தீடீரென்று வெளிப்படும் |
| வழிபறிகாரனைப போல் |
| எழும் ஒரு கேள்வி : |
| வாழ்க்கை என்பது |
| மலை மீது ஏறுவதா |
| மலையில் இருந்து இறங்குவதா |
No comments:
Post a Comment