| வள்ளலார் உரைத்த சாகா கலை பற்றி என் அறிவுக்கு எட்டிய | ||||||||||||||
| வரையில் புரிந்து கொண்ட செய்திகளை கவிதை வடிவில் | ||||||||||||||
எழுத முயற்சி
செய்துள்ளேன்.
|
Translate
Thursday, November 26, 2015
சாகா கலை
Saturday, November 21, 2015
மனம் போல வாழ்வு
| கவிதைக்குத்தான் இரண்டு பொருள் கொள்ள முடியும் என்று சொல்வார்கள் . |
| எடுத்துக்காட்டாக , |
| கற்க கசடற கற்பவை கற்ற பின் |
| நிற்க அதற்கு தக |
| என்ற குறளுக்கு ஐயத்திற்கு இடம் |
| இன்றி எதையும் கற்க வேண்டும் .பின்பு கற்ற படி நடக்க வேண்டும் |
| என்பதே நம் பள்ளி நாட்களில் தமிழ் ஆசிரியர்கள் நமக்கு |
| கற்பித்தது. |
| ஆனால் இதே குறளுக்கு இசைஞானி இளையராஜா சிந்திக்கும் |
| பொருளே வேறு மாதிரி உள்ளது. |
| கசடற என்றால் கெட்ட செய்திகளை படிக்க கூடாது . |
| நல்ல செய்திகளை மட்டுமே கற்று அதன்படி நடக்க வேண்டும் |
| என்று பொருள் கொள்கிறார் . இது அவரின் ஆன்மிக பார்வை ஆகும். |
| இதைபோலவே , |
| மனம் போல வாழ்வு என்ற வாழ்த்து வாக்கியத்தை இரண்டு |
| விதமாக நான் பொருள் கொள்கிறேன். |
| நம் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் அதன்படி நல் வாழ்க்கை அமையும் |
| என்பது ஒரு பொருள். |
| நமக்கு இந்த வாழ்கையில் எல்லாம் கிடைத்து விட்டது என்று நேர்மறையாக |
| சிந்தித்தால் அதன்படி மகிழ்ச்சியான வாழ்வு |
| எதிர்மறையாக நான் நினைத்தது எதுவும் கைகூட வில்லையே என்று |
| உள்ளம் குமுறி கொண்டே இருந்தால் வேதனையான வாழ்வு. |
சுழற்சி
| ஓடிக்கொண்டே இருக்கிறேன் |
| ஓர் நாள் என் வாழ்வில் வெற்றி வாராதா |
| என்ற ஏக்கத்தில் |
| வாடிக்கொண்டே இருக்கிறேன் |
| கால் வலியில் நடந்துகொண்டே |
| தேடிக்கொண்டே இருக்கிறேன் |
| என் கதையை கேட்போரை |
| நாடிக்கொண்டே இருக்கிறேன் |
| நல்லவர்களை நியாயம் தெரிந்தவர்களை |
| பாடிக்கொண்டே இருக்கிறேன் |
| பாட்டு முடியும் வரை ... |
Tuesday, November 3, 2015
அமைதியான நதியினிலே ஓடம்
| மக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த |
| சட்டமன்ற தேர்தல் அது. |
| நான்கு முனை போட்டியில் தமிழகமே பரபரப்பாகி இருந்தது. |
| தலைவர் கலைஞர் தலைமையில் தி .மு .க ஓர் அணியாகவும் , |
| அ.தி.மு.க. - ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியாகவும் , |
| ஜானகி தலைமையில் ஓர் அணியாகவும் , |
| மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் ஓர் அணியாகவும் , போட்டி இட்டன. |
| ஜானகி அணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்பொழுதுதான் |
| தொடங்கி இருந்த தமிழக முன்னேற்ற முன்னணி இணைந்து |
| போட்டி இட்டது. |
| தி. மு. க. தலைவர் கலைஞர் அவர்கள் நடிகர் திலகத்தின் |
| புதிய கட்சியை பெயரிலேயே இரண்டு முன்னேற்றமா என்று |
| தனக்கே உரிய பாணியில் கட்சியின் தொடக்க விழாவில் |
| பாராட்டி இருந்தார். |
| நடிகர் திலகம்தான் தமிழில் நாட்டிலேயே அதிக ஓட்டு |
| வித்யாசத்தில் திருவையாறு தொகுதியில் வெற்றி பெறுவார் |
| என்று ஜூனியர் விகடன் போன்ற அரசியல் பத்திரிகைகள் |
| செய்தி வெளியிட்டு கொண்டிருந்தன. |
| தேர்தலும் வந்தது. |
| முடிவுகள் வெளியாக தொடங்கின. |
| வானொலியில் செய்திகளை என் ஒட்டு மொத்த குடும்பத்தாரும் |
| கேட்டு கொண்டிருதனர் |
| பெருவாரியான இடங்களில் தி. மு. க. முன்னிலையில் இருப்பதாக |
| செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. |
| நடிகர் திலகம் தன் தொகுதியில் பின் தங்குகிறார் |
| என்று செய்திகள் வெளியாகின. |
| இந்த செய்தியை சொல்லி விட்டு , |
| ஆண்டவன் கட்டளை படத்தில் இருந்து ஒரு பாடல் தற்பொழுது |
| கேட்கலாம் என்றார் செய்தி வாசிப்பாளர். |
| அமைதியான நதியினிலே ஓடம் |
| என்ற பாடல் ஒலிபரப்பாக தொடங்கியது |
| கேட்டு கொண்டிருந்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி |
| இது தற்செயலா ? அல்லது திட்டமிட செயலா? |
| எங்களுக்கு புரியவில்லை |
| இந்த பாடல் முடிந்ததும் அடுத்த அதிர்ச்சி |
| ஜானகி எம்.ஜி.ஆர் -ம் தோல்வி அடைந்தார் என்பதுதான் அந்த அதிர்ச்சி |
| இதுக்கும் எதாவது பாட்டு போட்டுட போறாங்க ! என்று |
| என் அண்ணன் சொல்லி வாய் மூடவில்லை |
| பொன் எழில் பூத்தது புது வானில் (தி .மு .க வின் உதய சூரியன் |
| சின்னத்தின் வெற்றி முகம்) |
| வெண்பனி சூடும் நிலவே நில் |
| என் வன தோட்டத்து வண்ண பறவை |
| (எம்.ஜி.ஆர் வீடு ராமாவரம் தோட்டம் |
| மேலும் அ.தி.மு.க ஜானகி அணியின் |
| சின்னம் இரட்டை புறா) |
| சென்றது எங்கே சொல் சொல் |
| என்ற பாடல் ஒலிபரப்பாக தொடங்கியது |
| நடிகர் திலகத்திற்கு கவிஞர் கண்ணதாசனின் பாடல் |
| பொருந்தி போன அதே வேளையில் |
| ஜானகி எம் .ஜி.ஆருக்கு கண்ணதாசனின் அண்ணன் மகன் |
| பஞ்சு அருணாச்சலத்தின் பாடல் பொருந்தி போனது. |
| நடிகர் திலகம் உலக பெரும் நடிகர். |
| அவரை தமிழ் மக்கள் தலை சிறந்த நடிகர் என்று |
| கொண்டாடினார்களே தவிர அரசியல் தலைவர் |
| என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை |
| என்றெல்லாம் - |
| அரசியலை ஆய்வு செய்வோர் கூறினாலும் |
| என் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு |
| பெரும் வேதனையே . |
| ஒரு தகுதியும் இல்லாத எத்தனையோ பேர் தேர்தலில் |
| வெற்றி பெரும் வேளையில் கலை தாயின் தவ புதல்வன் |
| கலை வானின் முழு நிலவு எங்கள் நடிகர் திலகத்திற்கு |
| திருவையாறு தொகுதியில் இரண்டாம் இடம் கூட |
| இல்லாமல் நான்காம் இடத்திற்கு தள்ளிய கொடுமையை |
| என்னென்று உரைப்பது? |
| இவை எல்லாம் ஒரு புறம் இருக்க |
| நடிகர் திலகம் தன் அரசியல் தோல்வி பற்றி கூறும்போது , |
| அரசியலில் நான் தோற்கவில்லை |
| (அதாவது மக்கள் காரணமில்லை) |
| வஞ்சிக்க பட்டேன் |
| (எதிரிகளின் சூழ்ச்சி ) என்றார். |
| காலங்கள் பறந்தோடிவிட்டன |
| இப்பொழுதும் இந்த இரண்டு பாடல்களையும் |
| கேட்க நேரும்போதெல்லாம் |
| மனக்குகையில் உறங்கும் என் நினைவுகள் மெல்ல கண் விழிக்கும். |
Sunday, October 25, 2015
ஆண்வழிச்சேறல்
| 1 | ஆண்கள் எல்லோரும் ஆணவக்காரரே ஆதிக்கம் செய்தால் |
| அவர்களை அறவே ஒதுக்கு | |
| 2 | இல்லாளை மிதிக்கும் ஆண்மகனால் அக்குடும்பம் |
| இல்லாது ஒழிந்து விடும் | |
| 3 | பெண் இனத்தை பேய் என்று இழிக்கும் ஆண்கள் கூட்டம் |
| நாய்களுக்கும் இழிவாய்த்தள்ளப்படும் | |
| 4 | பெண்ணுக்கு பெண்ணை எதிரிகளாக்கும் |
| ஆணாதிக்க உலகம் உதிரிகளாகிவிடும் | |
| 5 | பேராண்மை எனப்படுவது யாதெனின் |
| பெண்மையை மதிப்பதே ஆகும் | |
| 6 | ஆண் ஏவல் செய்தொழுகும் பெண்மையின் அவன் உறவை |
| அறுத்தெறிந்த பெண்ணே பெருமை உடைத்து | |
| 7 | நத்தையாய் ஆணாதிக்க கூட்டுக்குள் முடங்காதே |
| பறவையாகு சிறகை விரி | |
| 8 | மணப்பந்தல் முன்னிறுத்தி வரதட்சனை கேட்கும் |
| கயவனுக்கு மாலை இடாதே விலங்கிடு | |
| 9 | ஒடிந்தும் பின் மடிந்தும் போவார் மண்ணுலகில் |
| மனையாள் சொல் கேளாதோர் | |
| 10 | அகிலத்தையே வென்றிடுவாள் ஆண் சுகத்திற்காய் |
| அடி பணிந்து மயங்காதாள் |
புதிய பார்வை
| நீதி தேவதையின் கண்களை |
| கருப்பு துணியால் |
| ஏன் மறைகிறீர்கள் ? |
| உண்மையை சொல்லுங்கள் ! |
| கையில் இருக்கும் |
| தராசு தட்டு ஒரு பக்கமாய் |
| சாய்வதை |
| கண்டுவிடக்கூடாது |
| என்பதால் தானே? |
Saturday, October 24, 2015
ஆறுதல்
| நிலவு வரவில்லையே |
| என்று |
| நீ ஏன் தேய் பிறையாகிறாய்? |
| உனக்காகத்தான் கண்சிமிட்டுகின்றன |
| நட்சத்திரங்கள் |
| ஏராளமாய்! |
கடிகார வாழ்க்கை
| வாழ்கையை விரட்டியபடி மனிதர்கள் |
| மனிதர்களை விரட்டியபடி மரணம் |
| நொடி முள்ளை விரட்டியபடி நிமிட முள் … |
| நிமிடமுள்ளை விரட்டியபடி மணிமுள் … |
ஒரு தலைவனின் தோல்வி
| இங்கே சில |
| வெற்றிகளுக்கே கூட விலாசம் |
| கிடையாது |
| ஆனால் உன்னுடைய |
| ஒவ்வொரு தோல்விகளுக்கும் |
| சரித்திரமே உண்டு |
Tuesday, February 10, 2015
இமயத்திற்கு பொன்னாடை
| சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் மு.மேத்தாவை சந்தித்து அவருடைய திரைபடபாடல்களை |
| நான் திறனாய்வு செய்து இருப்பது குறித்து பேசிகொண்டிருந்தேன். |
| நான் எழுதி இருந்த கட்டுரைகளை படித்து பார்த்த கவிஞர் |
| என் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்து விட்டு |
| கட்டுரைகள் குறித்து சில விளக்கங்களை என்னிடம் |
| கேட்டார். |
| ஓங்கும் உந்தன் கைகளால் வானை புரட்டி போடு |
| புது வாழ்வின் கீதம் பாடு |
| என்றுதானே எழுதிருந்தேன் |
| தூங்கும்உந்தன் கைகளால் வானை புரட்டி போடு |
| புது வாழ்வின் கீதம் பாடு |
| என்று வரிகளை குறிப்பிட்டு இருக்கிறீர்களே |
| என்று கேட்டார் |
| பாட்டு புத்தகத்தில் அவ்வாறு இருப்பதை நான் |
| சொன்னேன். |
| கவிஞரின் திரைப்பட பாடல்கள் தொகுப்பு நூல் |
| ஓன்று 1996 நர்மதா பதிப்பக நூலாக |
| வந்துள்ளது. |
| ஆனால் நான் குறிப்பிட்ட சூரிய வம்சம் படத்தில் |
| இடம்பிடித்த நட்சத்திர ஜன்னலில் என தொடங்கும் |
| பாடல் 1996 க்கு பிறகு என்பதால் அதில் இல்லை. |
| எனவே நடைபாதைகளில் விற்கும் அந்தந்த |
| திரைப்படங்களின் சிறு அச்சு நூலை நான் |
| வாங்கி இருந்தேன் |
| அதில்தான் கவிஞர் குறிப்பிட்ட இந்த பிழை |
| கவிஞரை சந்தித்து வந்த பின்பு சில நாட்களில் வேறு |
| ஒரு அச்சு பிழையை கண்டுபிடித்தேன். |
| பொன்னாடை இமயத்திற்கு போர்த்திவிடலாம் |
| என்றுதான் கவிஞர் எழுதி இருந்தார். |
| ஆனால் அந்த சிறு அச்சு நூலில் |
| பொன்னாடம் இமயத்திற்கு போர்த்திவிடலாம் |
| என்று வரிகளை பிழையாக குறிபிட்டு இருந்தார்கள் |
| திருக்குறளுக்கு நான் உரை எழுதுவது என்பது |
| இமயத்திற்கு பொன்னாடை போர்த்திவிடுவதை போன்றது |
| என்று தலைவர் கலைஞர் சொன்னதாக |
| கவிஞர் ஒரு நேர்காணலில் |
| குறிப்பிட்டு இருந்தார் |
| அந்த பாதிப்பிலேயே அந்த உவமையை கையாண்டதாகவும் |
| சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்குறீர்கள் என்று |
| கலைஞரே பாராட்டியதாகவும் கவிஞர் மேத்தா அந்த |
| நேர்காணலில் சொல்லிருந்தார். |
| அந்த நேர்காணலை படித்த போதே இதையும் |
| கண்டுகொண்டேன் |
| திரைப்படங்களில் கருத்துள்ள பாடல்கள் அமைவதே அரிது. |
| அப்படி அமைந்த நல்ல பாடலையும் அச்சு பிழை |
| செய்தே இப்படி கொலை செய்கிறார்களே என்று |
| வருந்தினேன் |
Saturday, January 31, 2015
விடை தேடும் உவமேயம்
| ஒவ்வொரு பத்து வருடத்தையும் |
| வாழ்க்கை கடக்கும் தருணங்களை |
| மலை பயணத்தின் |
| கொண்டை ஊசி வளைவுகளின் |
| திருப்பங்களாக |
| உணரும் வேளையில் . . . |
| இருளில் இருந்து |
| தீடீரென்று வெளிப்படும் |
| வழிபறிகாரனைப போல் |
| எழும் ஒரு கேள்வி : |
| வாழ்க்கை என்பது |
| மலை மீது ஏறுவதா |
| மலையில் இருந்து இறங்குவதா |
Wednesday, January 28, 2015
பாடல்
| கண்ணதாசன் மிக சிறந்த கவிஞர் . அதில் மாற்று கருத்துக்கு | |||||||||||||||||||||||||||||||||||||||||
| இடமில்லை. அதே வேளையில் ஏனைய பிற கவிஞர்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
| கண்ணதாசன் அளவிற்கு பாராட்ட படுவதில்லை. | |||||||||||||||||||||||||||||||||||||||||
ஆனால் இதில்
வியப்பு என்னவென்றால்,
|
Tuesday, January 27, 2015
இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு 2
ஒரு வருத்தம்அகத்தியன் அவர்கள் இயக்கிய காதல் கவிதை |
| படத்தில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்ளும் |
| ஓர் உரையாடல் |
| பிரசாந்தை பார்த்து இஷா கோபிகர் |
| சொல்கிறார் |
| அன்பே! அன்பே ! அப்பிடீன்னு உருகுகிற ஆண்பிள்ளையை கூட |
| நம்பிடலாம். |
| ஆனா அம்மா ! அம்மா! அப்பிடீன்னு சொல்லறானே அவன்களை |
| நம்பவே கூடாது. |
| என்னைமிகவும் காயபடுத்திய வசனம். |
| அம்மா என்ற உறவுநிலையில் |
| ஒரு இளம்பெண்ணை நினைத்து போற்றுகின்ற |
| மனிதன் எனக்குள்ளும் |
| வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். |
| என்னை விட்டுத்தள்ளுங்கள். |
| தன் மனைவியின் உருவிலே அன்னை அபிராமியே |
| தரிசித்த அபிராம பட்டரையோ, |
| எல்லா உயிர்களிலும் இறைவன் உறைந்துள்ளான் |
| என்றால் மனைவியும் தெய்வம்தானே |
| என்று சிந்தித்த மகா கவி பாரதியையோ |
| அந்த வசனத்தை கொண்டு எங்கனம் |
| அளப்பது? |
| அந்த வகையில் அகத்தியன் அவர்களிடம் |
| என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். |
இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு - ஒரு பாராட்டு ,
ஒரு பாராட்டு
| சில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை செய்தி |
| என்னை பரவசத்தில் ஆழ்த்தியது. |
| அந்த செய்தி .... |
| ஒரு இளம்பெண் காரில் தனியே பயணம் செய்து கொண்டு |
| இருக்கும் போது அவரை தொடர்ந்து வந்த வாகனம் |
| மிகவும் வேகமாக வந்த தோடு மட்டும் இல்லாமல் |
| மோதியும் விடுகிறது. |
| அந்த வாகனத்தில் வந்த மனிதர் தன் தவறை |
| உணராமல் |
| அந்த இளம் பெண்ணை மிகவும் இழிவாக பேசிவிட்டு |
| ஆணாதிக்க மமதையுடன் தன் வாகனத்தை ஒட்டிக்கொண்டு |
| செல்கிறார். |
| அந்த இளம் பெண்ணுக்கோ சுயமரியாதை காய முற்றதன் |
| விளைவாக கடும் கோபம் வருகிறது. |
| அந்த வாகனத்தை துரத்தி கொண்டே செல்கிறார். |
| பின்னால் துரத்தி வரும் பெண்ணை பார்த்து |
| அந்த மனிதர் பயந்து விடுகிறார். |
| அந்த மனிதர் சென்ற வண்டி இப்பொழுது |
| ஒரு காவல் நிலையத்தின் வாசலில் போய் |
| நிற்கிறது. |
| வேகமாக வண்டியில் இருந்து குதித்தவர் |
| காவல் நிலையத்திற்குள் சென்று விடுகிறார். |
| இப்பொழுதும் அசராத அந்த பெண் தானும் காவல் |
| நிலையத்திற்குள் சென்று அந்த மனிதரை தேடுகிறார் |
| அங்கு சென்ற பின்பே அவர் காவல் துறையில் |
| ஒரு உயர் பதவி வகிப்பவர் என்பது தெரிகிறது. |
| அவரின் உயர் பதவிக்கும் அஞ்சாத அந்த பெண், |
| பெண்கள் குறித்து நீங்கள் சொன்ன இழிவான |
| சொற்களுக்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் |
| என்று போராடுகிறார். |
| இதுவரையில் |
| ஆணாதிக்க சூழலிலேயே வாழ்ந்து வந்த அந்த |
| மனிதனால் ஒரு பெண்ணிடம் எப்படி மன்னிப்பு |
| கேட்பது என்ற வறட்டு கெளரவம் தடுத்தது. |
| கடைசியில் தன் போராட்டத்தில் வென்ற பின்பே |
| அந்த பெண் அந்த இடத்தை விட்டு நகர்கிறார். |
| இந்த செய்திகள் எல்லாம் பத்திரிகை வாயிலாக நான் |
| அறிந்தவை. |
| அந்த பெண் வேறு யாருமில்லை. |
| திரு.அகத்தியன் அவர்களின் மகள்தான். |
| தன்னுடைய மகளை இவ்வளவு துணிச்சலாக |
| வளர்த்த திரு.அகத்தியன் அவர்களுக்கு என் பாராட்டுகள். |
Subscribe to:
Comments (Atom)