Translate

Showing posts with label பாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா. Show all posts
Showing posts with label பாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா. Show all posts

Thursday, May 31, 2018

மூன்று கவிதைகள், மூன்று கவிஞர்கள்



அதோ பாருங்கள்! மேகங்கள் இல்லாத நிர்மலமான இரவு வானம்.

இருட்டு போர்வையை இழுத்து போர்த்தியப்படி இரவின் மடியில்

அமைதியாக நித்திரை கொள்ளும் ஊர்.

எங்கும் அமைதி. ஏகாந்தமான இனிமை.

தலை அசைத்து, தலை அசைத்து குதூகலிக்கும் மரம்செடிகொடிகள்.

அந்த இலக்கிய மாளிகையின் மொட்டைமாடியில் மூவர் தன்னை மறந்த லயத்தில். . .

நேற்று, இன்று, நாளை என்ற கால கிறுக்கலை அழுத்தி துடைத்து விட்டு முக்காலத்தையும் ஒற்றை கவிதை ஆக்கிய மோன நிலையில். . .

கற்பனைதான்.

இவையெல்லாம் கற்பனைதான் என்றாலும் அந்த மூவரும் நிஜம்.

அவர்கள் வெவ்வேறு காலங்களில் எழுதிய கவிதைகள் உண்மையிலும் உண்மை.


உண்மையை மறைக்க பொய் கூறும் உலகினில் பொய் கற்பனையை கூறி உண்மையை தரிசிக்கும் புதிய அனுபவம்.
அந்த மூவரில் .  .  .
ஒருவர் மகாகவி. பாரதியார்
இன்னொருவர் கவியரசு .நா.காமராசன்
மற்றும் ஒருவர் புதுக்கவிதை தாத்தா . மு.மேத்தா
இந்த இன்ப நிலையை மூவரும் வார்த்தைகளுக்குள் சிறைப்படுத்த நினைக்கின்றனர்.


மகாகவி. பாரதியார் சொல்கிறார்:
பட்டு கரு நீல புடவை பதித்த நல்வைரம்
நட்டநடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி!

கவியரசு .நா.காமராசன் சொல்கிறார்:
காயம்பூ கருக்கிட்டு அவ கண்ணு இரண்டும்
மின்விளக்கு ஆகாசம் சிரிச்சிருக்கு அங்கெ ஆயிரம் பூ மலர்ந்திருக்கு.


புதுக்கவிதை தாத்தா . மு.மேத்தா சொல்கிறார்:
நூறு நூறு தீபமாய் வானில் அன்று கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை.