Translate

Showing posts with label மணப்பாறை மருத்துவர் . லட்சுமி நாராயணன். Show all posts
Showing posts with label மணப்பாறை மருத்துவர் . லட்சுமி நாராயணன். Show all posts

Monday, August 6, 2018

மணப்பாறை மருத்துவர் . லட்சுமி நாராயணன்



(வினவு இணையத் தள கட்டுரைக்கு மீண்டும் என் மறுப்புரை)

 

எனக்கு தற்போது நாற்பத்தி இரண்டு வயதாகிறது.

1980 - 1986 கால கட்டத்தில் எங்கள் குடும்பம் என் தந்தையின் பணி நிமித்தமாக மணப்பாறை நகரத்தில் குடியிருந்தது.

அப்பொழுது நான் 5-ம் வகுப்பு படிக்கும் போது மஞ்சள்காமாலை நோயால் பாதிக்க பட்டேன்.

என் தந்தை என்னை ஆங்கில மருத்துவர் திரு லட்சுமி நாராயணன் அவர்களிடம் அழைத்து சென்றார்.

அவர் மருந்து சீட்டை எழுதி தந்தபின் சாப்பாட்டில் (எண்ணெய் சேர்க்காமல்) இருக்க வேண்டிய கட்டுப்பாடுகளை சொன்னார்.

 


பின்பு என் தந்தை , மருத்துவரிடம்

டாக்டர் இந்த கீழாநெல்லி இலையை மஞ்சள்காமாலைக்கு

தரலாமின்னு சொல்ராங்களே ?

உங்க கருத்து என்ன டாக்டர் என்று கேட்டபோது ,

தாராளமா கொடுங்க! இந்த மாத்திரையே அந்த கீழா நல்லியில் இருந்து தயாரிச்சதுதான் என்றார்.

அய்யா! அவர் MBBS படிச்ச ஆங்கில மருத்துவர் தான்.

மருத்துவத்தை சேவையாய் செய்த மாமனிதர்.


அதனால்தான் உண்மையை வெளிப்படையாக கூறினார்.

மணப்பாறையை ஒட்டியுள்ள பல பட்டிதொட்டிகளுக்கு (குக்கிராமங்களுக்கு) மணப்பாறைதான் சிட்டி.

அந்த ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவே வைத்தியம் பார்த்த மாமனிதர் அவர்.

என் தந்தை போன்ற (அரசு பணியாளர்) நடுத்தர வர்க்கத்திடம் மட்டும் மிக குறைவாக 5 ரூபாய் வாங்கிக்கொள்வார்.

ஏழைகள் என தெரிந்தால் இலவச மருத்துவமே.

 

மக்கள் பணியே மகேசன் பணி என வாழ்ந்த அவர் தற்போது “மருத்துவமாமணி” என்ற பட்டதோடு மார்பளவு சிலையாக மாரியம்மன் கோயில் அருகில் இருக்கிறார்.

ஆங்கில மருத்துவர் திரு லட்சுமி நாராயணன் கீழாநெல்லி தருவதை அறிவியலுக்கு புறம்பானது என்று தீர்ப்பிடவில்லை.

ஹீலர் பாஸ்கர் அவர்கள் சொல்வது அனைத்தும் அறிவியல் அடிப்படையே.

உடல் கூற்றியல் நூல்களின் சாரத்தையே தன் சொற்பொழிவாக மக்களுக்கு தந்துள்ளார்.

 


 

மீண்டும் மீண்டும் ஹீலர் பாஸ்கரை மூடர் என்றும், பித்தலாட்டக்காரர் என்றும் கூறுவது கண்டிப்பாக உள்நோக்கம் கொண்டதே.

ஹீலர் பாஸ்கர் சொல்லும் healing therapy ஆக இருந்தாலும் , மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பிரசவம் ஆனாலும் தகுந்த பயிற்சி பெறாமல் செய்வது ஆபத்தில்தான் முடியும்.

திருப்பூர் சகோதரி கிருத்திகா விஷயத்தில் அவரின் கணவர் முழுமையாக

பயிற்சி பெறாமல் அரைகுறை அறிவோடு பிரசவம் பார்த்ததே சோக முடிவிற்கு காரணம்.

 

அந்த உடன்பிறவா தங்கையை நினைத்து என் மனம் கண்ணீர் வடிக்கிறது

இனி இதுபோல் ஒரு சோகம் நடக்க கூடாது என்பதே என் நிலைப்பாடு.

இந்த நேரத்தில் இன்னொரு கேள்வியையும் உங்கள் முன் வைக்கிறேன்.

அண்மையில் என் தந்தைக்கு பல் சொத்தை உபாதை காரணமாக பல் மருத்துவரிடம் அழைத்து சென்றேன்.

பல் பிடுங்கிய பின் அந்த மருத்துவர் சொன்னார் :

 

அப்பாடா ! இப்பதான் Relax ஆ இருக்கு சரவணன்!

இந்த குறிப்பிட்ட கடவாய் பல்லோட வேர்

இதய நாளங்களோட சம்பந்த பட்டது . நல்ல வேலை, நல்லபடியா முடிச்சது

பல நேரங்களில் இந்த பல்ல பிடுங்கும் போது மாரடைப்பு வந்துரும்

Now Uncle Is Safe

இதுல இருந்து என்ன தெரியுது ?

ஆங்கில மருத்துவம் என்றாலும் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் சிகிட்சையின் போது அதன் தொடர் புடைய வேறு உறுப்பு பாதிப்பு அடையலாம்.

அந்த RISK உடன்தான் வைத்தியம் நடக்கிறது. அறுவை சிகிச்சையின் போது

உறவினரிடம் கையெழுத்து வாங்குவது இதனால்தான்.