Translate

Showing posts with label இஷா கோபிகர். Show all posts
Showing posts with label இஷா கோபிகர். Show all posts

Tuesday, January 27, 2015

இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு 2

ஒரு வருத்தம்


அகத்தியன் அவர்கள் இயக்கிய காதல் கவிதை
படத்தில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்ளும்
ஓர் உரையாடல்
பிரசாந்தை பார்த்து இஷா கோபிகர்
சொல்கிறார்
அன்பே! அன்பே ! அப்பிடீன்னு உருகுகிற ஆண்பிள்ளையை கூட 
நம்பிடலாம்.
ஆனா அம்மா ! அம்மா! அப்பிடீன்னு சொல்லறானே அவன்களை
நம்பவே கூடாது. 
என்னைமிகவும் காயபடுத்திய வசனம்.
 அம்மா என்ற உறவுநிலையில் 
ஒரு இளம்பெண்ணை நினைத்து போற்றுகின்ற 
மனிதன் எனக்குள்ளும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.
என்னை விட்டுத்தள்ளுங்கள்.
தன் மனைவியின் உருவிலே அன்னை அபிராமியே 
தரிசித்த அபிராம பட்டரையோ,
எல்லா உயிர்களிலும் இறைவன் உறைந்துள்ளான்
என்றால் மனைவியும் தெய்வம்தானே 
என்று சிந்தித்த மகா கவி பாரதியையோ 
அந்த வசனத்தை கொண்டு எங்கனம் 
அளப்பது?
அந்த வகையில் அகத்தியன் அவர்களிடம்
என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்.