Translate

Showing posts with label ஸ்டெர்லைட் ஆலை. Show all posts
Showing posts with label ஸ்டெர்லைட் ஆலை. Show all posts

Wednesday, May 30, 2018

ஆன்மீக அரசியல் வித்தகர்






எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடுமாம் ஆன்மீக அரசியல் வித்தகரின் அறிவிப்பு இது.

எல்லாவற்றிக்கும் போராடும் நிலையில் மக்களை தள்ளியது யார்?

மக்கள் போராடக்கூடாது என்கிறீர்களே!

ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்கள் ஏன் மீண்டும் மீண்டும்  உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் என்று நீதி மன்ற படிக்கட்டுகளில் ஏறி ஏறி இந்த நாசகார ஆலையை தமிழ்நாடு மீது திணிக்க படும் பாடு படுகிறார்கள்?

அணில் அகர்வாலிடம் போய் உங்கள் அறிவுரைகளை அள்ளி வழங்க வேண்டியதுதானே?

மகாராஷ்டிரா, கோவா, குஜராத் இந்த மாநிலத்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிராக போராடவில்லையா?

அவர்களிடம் போய் உங்கள் அறிவுரைகளை அள்ளி வழங்க வேண்டியதுதானே?

எல்லாவற்றிக்கும் போராட்டம் தீர்வாகாது. நீதி மன்றங்களை நாடுங்கள் என்று கூறுகிறீர்களே!

நீதி மன்ற உத்தரவுகளை எந்த அரசு மதித்து செயல் படுகிறது?

தேசீய நெடுஞசாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி எத்தனை முறை உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பின்பும்,சட்டத்தின் சந்து பொந்துகளை (நெடுஞசாலைகளில் இருந்து 100அடி தள்ளி சாராய கடைகளை அமைத்து) பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்துகிறது மாநில அரசு.

காவேரியில் நம் பங்கை தர சொல்லி உச்ச நீதி மன்றம்  எத்தனை முறை உத்தரவிட்டது ?

கர்நாடக மாநில அரசு அந்த உத்தரவை மதித்ததா ?

 மைய அரசு கர்நாடக அரசை வற்புறுத்தியதா ?

இந்நிலையில் தமிழ் மக்கள் போராடுவது சரியா ? இல்லையா ?
ஆன்மீக அரசியல் வித்தகர்தான் பதில் கூறவேண்டும்.
சீருடையில் இருக்கும் காவலர்களை தாக்கினால் நான் பொறுக்க மாட்டேன் .

உங்கள் வாதப்படி தாக்கியவர்களை திருப்பி தாக்க வேண்டியதுதானே ?

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள், காலுக்கு கீழே சுடுதல், ஆகாயத்தை நோக்கி சுடுதல் இத்தனை வாய்ப்புகள் இருந்தும்,

குறி பார்த்து சுட்ட கொடூரம் ஏன்?


சமூக விரோதிகள் நச்சு கிருமிகள் அதிகரித்து விட்டார்கள்.

அரசு அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

அங்கே சுடப்பட்டவர்களில் ,படுகாயம் அடைந்தவர்களில் ஒருவரேனும் நீங்கள் பட்டியலிட்ட (காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்தல், ஆலை பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு  தீ வைத்தல்) குற்றங்களை செய்ததற்கு  ஆதாரம் உண்டா ?

நீங்கள் சொன்ன சமூக விரோதிகள் யார் ? இப்படி பொது சொத்துக்களுக்கு தீ வைப்பதால் அவர்கள் சாதித்ததென்ன ? அவர்களை இன்னுமா கண்டு பிடித்து கைது செய்ய முடியவில்லை ?

ஸ்டெர்லைட் ஆலை சுற்று சூழல் விதிகளை மீறி உள்ளது .100 கோடி அபராதம் கட்டவேண்டும் என்று கடைசியாக தந்த தீர்ப்பில் தெளிவாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 ஆனால் ஆலை அதிபர் அணில் அகர்வாலோ,

 ஆலையால் சுற்று சூழல் மாசுபாடு என்பது போராளிகள் என்ற பெயர் கொண்ட தேச விரோதிகளின் பொய் பிரசாரம் என்று முதலை கண்ணீர் வடிக்கிறார்.
ஆன்மீக அரசியல் வித்தகரை விடவும் அவர் பெரிய வித்தகராக இருப்பார் போலிருக்கிறது.
கொஞ்சம் நாமெல்லாம் அயர்ந்தால்,

முழு பூசிணிக்காயை ஒரு கவளம் சோற்றில் மறைப்பவர்களுக்கு மத்தியில்,

இமய மலையையே ஒரு கவளம் சோற்றில் மறைத்துவிடுவார் போலிருக்கிறது.


போராடும் நம் தமிழ் மக்களை பார்த்து,

ஆன்மீக அரசியல் வித்தகர் சமூக விரோதிகள் என்கிறார்.

ஆலை வித்தகர் தேச விரோதிகள் என்கிறார்.

இந்த அட்டுழியங்களை பார்க்கும் போது,

எனக்கு கவிஞர் மு.மேத்தாவின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.

 
நாக்கை சுழற்றினால்


நாச சக்தியாம்.

பேசவே கூடாதாம்

பிரிவினை வாதியாம்.

உலையில் தான்

அரிசி பொங்க வேண்டுமாம்

உள்ளத்தினால் யாரும்

பொங்கவேகூடாதாம்

தமிழா! தமிழா!

அகராதி ஓன்று புதிதாய் வாங்கு!

அர்த்தங்கள் புரிந்தபின்

சுகமாய் தூங்கு!

Wednesday, May 23, 2018

ஒரு வாழை மரத்தின் சபதம்



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திருக்கிறது .

இந்த கொடூர துப்பாக்கி சூடு, தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமையிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உலக தமிழர்களின் நிலையோ,

"என் கண்ணீரின் வெப்பநிலை அதிகரித்தது "

என்ற கவிஞர் நா.காமராசனின்  நெருப்பு வரிகளை நம் கண் முன்னே நிறுத்துகிறது.

அநீதியாக கொல்லப்பட்ட அப்பாவி மனிதர்களை எண்ணி எண்ணி

கடந்த இரு தினங்களாகவே மிகுந்த துயரத்தில் உழல்கிறேன்.

தமிழ் ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும்,

ஜல்லி கட்டு போராட்டத்திற்கு ஒரு தோழமை சக்தியாக மீனவர்கள் இருந்த ஒரே காரணத்திற்காக

மீனவர்குப்பம் அதிகாரசக்திகளால் கோரமாக சூறையாடப் பட்ட போதும்,

அண்மையிலே ஜெருசலம் நகரிலே 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள்

இசுரேலிய ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டபோதும்,

என் மனம் வேதனையால் தீய்கிறது.

ஒரு சூறாவளியாக வேதனையும் கண்ணீரும் என்னை சுழன்றடிக்கும்

போதெல்லாம் நான் தலைசாய்த்து ஆறுதல் பெறும் தாய்மடியாய் இருப்பவை

கவிஞர். மு.மேத்தாவின் கவிதைகளே.


“மானுடம் எங்கெங்கல்லாம் காயம் படுகிறதோ
அங்கெங்கல்லாம் பூக்கும் சகோதர சோகங்களின்
சர்வதேசிய பூக்கள் இவைதான்”
என்று கவிதைகளை கண்ணீர்ப்பூக்களாக
பூக்க செய்த மேத்தாவின் வரிகளை நெஞ்சில் நிறுத்துக்கிறேன்.


தன் தலை முறை நலமுடன் வாழ தன்னையே உயிர்பலி தந்த,
அந்த தியாக சுடர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் இவ்வேளையில் ,

ஒரு வாழை மரத்தின் சபதம் என் காதுகளில் அசரீரியாக ஒலிக்கிறது.
ஆம் ஒரு ஒரு வாழை மரத்தின் சபதம்தான்.
கவிஞர் மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் கவிதைத்தொகுதியில்,
இடம்பெற்ற அந்த கவிதையின் சில வரிகளை பகிர்வதன் மூலம் உங்களோடு சேர்ந்து நானும் புது நம்பிக்கை கொள்கிறேன் .


ஒரு வாழை மரத்தின் சபதம்
நான் மண்ணில் வேரோடி
மாநிலத்தில் கால் பதித்து
வீசும் புயற் காற்றை
விழும் வரைக்கும் நின்றெதிர்ப்பேன்
நின்றெதிர்த்த முடிவினில் நான்
நிலத்தில் விழுந்துவிட்டால் … என்
கன்றெதிர்க்கும்! கன்றுகளின்
கன்றெதிர்க்கும்! கன்றுடைய
கன்றெதிர்க்கும்!