Translate

Showing posts with label வள்ளலார். Show all posts
Showing posts with label வள்ளலார். Show all posts

Thursday, May 17, 2018

வள்ளலார்




உலகம் அனைத்தும் ஒரே ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்ற அன்னி பெசன்ட் அம்மையார் (ஹோம் ரூல் இயக்கம் மற்றும் ப்ரம்ம ஞான சபையை நிறுவியவர்) ஒரு பிரீ  மசோனரி என்று ஆன்டி இல்லுமினாட்டி கள் கூற தொடங்கியுள்ளனர்.

சுவாமி விவேகானந்தரையும் இந்த பட்டியலில் சேர்த்து விட்டனர் .

“அகில உலகமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆட்சியின் கீழ் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.”

என்று வள்ளலார் அறைகூவல் விடுதிருப்பதால் அவரையும் சேர்த்து விடுவார்களோ என்று நான் அச்சப்படுவதால்  சில விளக்கங்கள் கூற முற்பட்டுள்ளேன்.

"கருணை இல்லா  ஆட்சி கடுகி ஒழிக”

என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு (இங்கிலாந்து அரச குடும்பம்)

எதிராக சங்கநாதம் இசைத்தவர் வள்ளலார்.

இங்கிலாந்து அரச குடும்பமே இல்லுமினாட்டிகளின் எஜமானர்கள் என்று ஆன்டி இல்லுமினாட்டிகள் கூறுவதால் வள்ளலாரை பிரீ  மசோனரி என்று முத்திரை குத்தமுடியாது.

மேலும் அவர் ஒரு மகான் மட்டுமல்ல.

ஒரு சிறந்த சித்த மருத்துவரும் (நமது பாரம்பரிய மருத்துவம் ) ஆவார்.


Thursday, November 26, 2015

சாகா கலை

வள்ளலார்  உரைத்த சாகா கலை பற்றி என் அறிவுக்கு எட்டிய 
வரையில் புரிந்து கொண்ட செய்திகளை கவிதை வடிவில்
எழுத முயற்சி செய்துள்ளேன்.


சாகா கலையினாலே போகாது
உயிர் விட்டு
வேகாது இத்தேகம்
மாயாது தேயாது
பிணம் என்ற சொல் அங்கு
பிணமாகும்
ஒளியாகி நறுமணம்  வீசுவது
நம் மனமாகும்