Translate

Showing posts with label சகோதரன். Show all posts
Showing posts with label சகோதரன். Show all posts

Sunday, October 27, 2013

தொலைவில் ஒரு சகோதரன்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில்

ஒரு பெயர் அறியாத சகோதரன்

அவன் விட்டின் முன்னே

நிற்கும் புகை படம்

கூகிள் மாப்சில் பார்கிறேன்

என் வீட்டில் இருந்தபடியே



உள்ளம்கையில் உலகம்
வந்ததாய் என் மனம் துள்ள

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

கணியன் பூங்குன்றனின் வரிகளில்

என் இதயம் நனைய



"வானத்துக்கு கிழே எல்லோரும்
வாழ்கிறோம் "

என்று தன் கவிதை கரங்களால்
உலக மக்களை எல்லாம்
அணைத்துகொண்ட கவிஞர் நா.காமராசனின்
வரிகளில் என் மனம் சிலிர்க்க


ஒரு நொடிதான்
இவையெல்லாம்

யார் அவன் ?
பெயர் என்ன ?

வீட்டின் கதவை திறக்கிறானா ?
வீட்டின் கதவை பூட்டுகிறானா ?

திருமணம் ஆனவனா ?
அனபானவளா அவன் மனைவி ?

எம் ஈழதமிழரின் வேதனையை
நான் உரைத்தால்

காது கொடுப்பானா ?

அவர்தம் கண்ணீர் துடைக்க
கை கொடுப்பானா ?

கேள்விகளால் நான்

கிழிக்கப்பட
வெகு தொலைவில் சென்றுவிட்டான்

அந்த பெயர் அறியாத சகோதரன்

மீண்டும்.