Translate

Tuesday, August 28, 2018

பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே



பல ஆண்டுகளுக்கு முன்பு என் குடும்பம் மணப்பாறையில் குடியிருந்தபோது (என் ஆரம்பப்பள்ளி நாட்கள் அவை

1980-1986) நாங்கள் பார்த்த திரைப்படம் நடிகர்திலகம் மற்றும் முன்னணி நடிகர் நடிகையர்கள்  நடித்த "நீதிபதி" என்ற திரைப்படம்.

அந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் ஒரு நேர்மையான நீதிபதியாக நடித்திருப்பார் .


அவர் தன் நேர்மையான அணுகுமுறையால் நீதி துறைக்குள்ளும் ,குடும்பத்திலும் கெட்டவர்களால் எதிர்கொள்ளும் இன்னல்களும் அதில் இருந்து அவர் மீண்டு வருவதே திரைப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

இந்த திரைப்படத்தை நான் எட்டு வயது சிறுவனாக பார்த்ததன் பின்பு சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் "பாசமலரே "

எனத்தொடங்கும் பாடலை பார்க்க நேர்ந்தது.

அதில் வரும்,

அன்பை உரைத்திட வாய் இல்லாத அழகு சிலை இவள்

கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்

போன்ற வரிகளை கேட்டபின்பு,

அடுத்துவரும்

உன்வசத்தில் இந்த ஊமைக்குயில் இவள்

இன்பம் துன்பம் இனி உந்தன் கையில்

போன்ற வரிகளை கூட கேட்க பொறுமை இல்லாத எனக்கு

ஒரு எண்ணம் எழுந்தது.

என்னய்யா இது ரொம்ப ஓவரால்லா இருக்கு ?
அந்த பொண்ணுக்கு,
வாயை திறந்து நாலு அன்பான வார்த்தைகளை கூடவா சொல்ல தெரியாது?
எனக்கு பசிக்கிதுன்னு கூட சொல்ல தெரியாமயா   கல்யாண வயசு வரைக்கும்
ஒரு பெண்ணை சிவாஜியும் , கே .ஆர் .விஜயாவும் வளர்த்திருப்பார்கள்?
என்று நினைத்த நான் எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன்.
 பிறிதொரு நாள் முழு திரைப்படத்தையும் பார்த்தபோதுதான்  என் தவறான அனுமானம்  எனக்கு விளங்கியது.
அந்த தம்பதிகளின் செல்ல மகள் ஒரு ஊமை. 
மன்னிக்கவும் அந்த தம்பதிகளின் செல்ல மகள்  ஒரு மாற்று திறனாளி
(அய்யா தமிழ் இன தலைவரே! கலைஞரே!  நன்றி அய்யா
நீங்கள் இறந்தும் இறவாமல் உங்கள் வார்த்தைகளால் என்னை வழி நடத்தியமைக்கு)
பிறகு வேறென்ன செய்தி ?
அந்த தம்பதிகளின் செல்ல மகளாக நடித்தவர் அந்த காலத்து
கீர்த்தி சுரேஷ்.
இந்த காலத்தில் நாம் காணும் திரை த்தாரகையோ இந்த காலத்து மேனகா

எதற்காக இந்த அனுபவ பதிவு என்றால் ஒரு திரைப்படப்பாடலை அந்த திரைப்படத்தில் இருந்து தனியாக வைத்து சிந்தித்தால் பொருள் விளங்காது அல்லது தவறான பொருள் வரும்.
ஒரு திரைப்படப்பாடலுக்கே இந்நிலை எனில் கவிதைக்கு?


அந்த பாடல் …

நன்றி SMULE இணைய தளத்திற்கு
படம் : நீதிபதி
பாடியவர்கள் : TMS,சுஷீலா,ஷைலஜா
பதிவேற்றம் : ஜபருல்லாஹ்
ஆஆஆ ,ஆஆஆ,ஆஆஆ,ஆ
ஆஆஆஆஆ,ஆஆஆஆஆஆ
ல ல ல, ல ல ல, ல ல ல,ல ல ல ல.
பாச மலரே, அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ (2)
உன் மடியினில் தவழ்ந்திடும் வீணை
இனி மயக்கிடும் துணைவரும் நாளை
உன் மௌனம்....இசைக்கும்....கீதமே
பாச மலரே, அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
பதிவேற்றம் : ஜபருல்லாஹ்
முத்து மணிச்சரம் மோதிரம், நகைகள் பூட்டவே
முல்லை மலர் சர மல்லிகை,குழலில் சூட்டுவே
வண்ணக் கரங்களில் தாயிவள்,வளையல் மாட்டுவே
சின்ன விழிகளின்,ஓரம்எங்கும்,மையை தீட்டவே
கண்மணியே, எங்கள் பொன்மணியே
நல்ல கற்பகமே, பெண்மை அற்புதமே
நீ மேடை வந்து, மாலைக் கொள்ளும்
வைபோகமே......தெய்வீகமே
பாச மலரே, அன்பில் விளைந்த, வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
பதிவேற்றம் : ஜபருல்லாஹ்
நெற்றிதிலகமும்,தாலியும்,நிலைத்து வாழ்கவே
வெற்றித் திருமகள் வாசலை, நலங்கள் சூழ்கவே
அன்பை உரைத்திட வாயில்லாத,அழகுச்சிலையிவள்
கொண்ட பசியையும் கூறிடாத,குழந்தை போன்றவள்
உன் வசத்தில், இந்த ஊமைக் குயில்,

இவள் இன்பம் துன்பம், இனி உந்தன் கையில்
நீ காவல் நின்று காத்திடுக,
கண் போலவே,, பொன் போலவே…
பாச மலரே, அன்பில் விளைந்த வாச மலரே
குலமகளே நீ வாழ்கவே













No comments:

Post a Comment