Translate

Friday, August 24, 2018

புதையல்


நான் 1980 மற்றும் 1986 க்கு இடைப்பட்ட வருடங்களில் மணப்பாறையில் உள்ள புனித மரி அன்னை துவக்க பள்ளியில் படித்து கொண்டிருந்த காலமது.


பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்காக ஆசிரியை ஒருவர் திரைப்பாடல் மெட்டில் எழுதிய பாடல்கள் இரண்டு.

ஓன்று இந்திய சுதந்திர போராட்டத்தை குறிப்பது.

மற்றொன்று இயேசு நாதரை வணங்கி பாடும் பக்தி பாடல்.

அந்த நோட்டை பல வருடங்கள் பாதுகாத்து வைத்திருந்தேன்.

தற்போது என் கண்களுக்கு தட்டுப்படவில்லை. 

அந்த நோட்டை நான் கண்டெடுக்கும் வரையில் என்  நினைவில்
உள்ள வரிகளையே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கவிஞர் மனுஸ்ய புத்திரனை ஒரு இஸ்லாமியர் என்று முத்திரை குத்தி அவரது கவிதை பணியை கொச்சை படுத்தும் இத்தருணத்தில்,
இந்த பாடல்களை எழுதிய ஆசிரியையின் பெயர் நூர்ஜஹான் என்ற தகவலை தெரிவிப்பதன் மூலம் இஸ்லாமியர்கள், சமூகத்தின் அனைத்து வகுப்பினரிடமும் நல்லிணக்கத்தை பேணவே விரும்புகின்றனர் என்ற செய்தியை இந்த சமூகத்திற்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
மேலும் இஸ்லாமிய சமூகத்தின் தேச பக்தி மறக்க பட்டதல்ல . அது திட்டமிட்டே மறைக்க பட்டது என்பதும் உறுதி.
அந்த பாடல்கள்  ...

(அடி என்னடி ராக்கம்மா  (பட்டிக்காடா பட்டணமா) திரைப்பாடல் மெட்டு)
சொல்லடா தம்பி நம் பண்பாட்டு பெருமை
இந்நாளில் மயங்கியது
நம் முன்னோரின் சீரற்ற வேற்றுமை மயக்கம்
நம் தேசம் கலங்கியது
வந்தானே வெள்ளையன் கையேந்தி அந்த வரவுக்கு
இடம்தந்தது.


(வாழும் வரை போராடு (பாடும் வானம்பாடி) திரைப்பாடல் மெட்டு)

அன்பின் இறைவா போற்றி வாழ்த்தி வணங்கிடுவோமே









1 comment: