Translate

Tuesday, October 30, 2018

MEE TOO வும் வைரமுத்துவும்





ஒரு பக்கம் ,  

“ஓ! ஒரு தென்றல் புயல் ஆகி வருதே

ஓ! ஒரு  தெய்வம் படித்தாண்டி வருதே

கால தேவனின் தர்ம எல்லைகள்

மாறுகின்றதே”

என்றும்,

“எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்

எங்கே போயின எங்கள் முகங்கள்

முகமும் அற்று முகவரி அற்று

முடிந்து போயின ஆயிரம் கணங்கள்”

என்றும்,

தன் பாடலில் பெண்ணுரிமை முழக்கம் செய்யவேண்டியது.

மறுபுறம்

“விடியும் வரை பெண் அழகு”

“ஏழு மணிக்கு மேல நீ இன்பலட்சுமி”

“எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வைப்பாட்டி”

“ஜாஹிர் உசேன் தபேலா இவள்தானா ?

“பால்போன்ற தேகம்தான்டி உனக்கு

அதில் பாலாடை கொஞ்சம் விலக்கு”

“லஞ்ச்க்கு   ஒரு மஞ்சுளாவும்

டின்னர்க்கு வெண்ணிலாவும்

இருந்தா  இளமைக்கு யோகம்”

என்றெல்லாம் எழுதி பெண்மையை இழிவு செய்வது.

பணம் சம்பாரித்து பிழைப்பு நடத்துவது.

இவற்றை தட்டிக்கேட்டால் ,

“இந்த சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்பது கவிதை

சமூகம் எப்படி இருக்கிறது என்பது திரைப்படப்பாடல் “

என்று கோணல் விளக்கம் தருவது .

இப்படியாக கடந்த காலங்களில்,

அரைகுறையாக கிழிந்த வைரமுத்துவின் முகத்திரை இன்று  #MEE TOO ஆல்

முற்று முழுதாக கிழிந்து தொங்குகிறது.


 

“நல்ல மனிதனாக வாழமுடியாதவன் நல்ல கவிஞனாக இருக்க முடியாதுஅப்படி இல்லாவிட்டால் அவன் கவிதை பொய்யாக இருக்கவேண்டும் அல்லது அவன் பொய்யாக இருக்கவேண்டும்.”

என்று ஒரு நேர்காணலில் கவிஞர்களை பற்றிய தன் மதிப்பீட்டை குறிப்பிட்டு இருந்தார் கவிஞர் மு.மேத்தா.

வைரமுத்துவுக்கு இந்த விளக்கம் எவ்வளவு பொருத்தம் என்று எண்ணி பார்க்கின்றேன்.

 

ஒரு முறை இசைஞானி இளைய ராஜா,   கவிஞர் நா.காமராசனிடம்

“ஒட்டிக்கோ மச்சான்
நீ என்னை கட்டிக்கோ மச்சான்”

என்று பல்லவியை சொல்லி பாடலை தொடருங்கள் என்று கூறியபோது,

“உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

கனவுகளில் உன்னை கண்டு வெட்கம் வந்தது” என்று இலக்கியம் படைத்தவன் நான்.

 

பெண்மையை இழிவு செய்யும் வகையில் இப்படிப்பட்ட வரிகளை என்னால் எழுத முடியாது .

நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம்    

என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டதாக தன் கட்டுரை தொடரில் (இவர்கள் என் சமகாலத்தோழர்கள்) பதிவு செய்கிறார் கவிஞர் நா .காமராசன்.

இத்தனைக்கும் வைரமுத்துவுக்கு முன்பாகவே திரை உலகில் பாடல் எழுத தொடங்கியவர் கவிஞர் நா .காமராசன்.

சுமார் முப்பது என்ற எண்ணிக்கை அளவிலே திரைப்பாடல்களை எழுதி உள்ளார் .

இதுவே இவர் ஒரு கொள்கை பிடிப்பானவர் என்பதற்கான சான்று.

ஆனால் வைரமுத்துவோ பல ஆயிரகணக்கான பாடல் எழுதி கோடிகளில் புரண்டாலும் ரச குறைவான பாடல் எழுத மறுப்பு சொல்வதில்லை .

 

MEE TOO விவகாரத்தில் சின்மயி மட்டுமே குற்றம் சாட்டவில்லை

வேறு பலபெண்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

சின்மயின் குற்றச்சாட்டுக்கு பின்புலமாக அரசியல் உள்ளது என்று மழுப்பும் சிலர்,

திரு மிகு புவனா மற்றும் பலரின் குற்றச்சாட்டுக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

எத்தனை பெண்கள் அவருடைய பாலியல் துன்புறுத்தலால் எங்கள் பாடகி கனவு பலியானது என்று குமுறுகிறார்கள்?

அத்தனை பேரும் அவதூறு செய்கிறார்களா ?

அத்தனை பெண்களும் பொய்யர்கள் வைரமுத்து மட்டும் அரிச்சந்திரனின் அண்டை வீட்டுக்காரர் என்ற முடிவுக்கு இந்த சமூகம் வரப்போகிறதா?

காலம் பதில் சொல்லும் என்று நழுவப்பார்க்கும் வைரமுத்து,

ஒரு நேரம் என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை , உள் நோக்கம் கொண்டவை என்று கூறும் வைரமுத்து,

நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்

என்று முரண்படுவது ஏன் ?

நான் நல்லவன் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றல்லவா கூறியிருக்கவேண்டும் ?  

நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்

என்றால் இவர் தவறு செய்திருக்கிறார் என்ற சந்தேகம் நம் போன்றோருக்கு எழுவது இயல்பானதுதானே ?

இந்த நிலையில் பாரதிராஜா, MEE TOO சம்பந்தமான கேள்விக்கு கடும் சினம் கொள்கிறார்.

 


ஏற்கனவே நடிகை ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில், அந்த பெண்ணின் ஒப்புதலோடுதான் நடந்தது என்று நியாய படுத்தியவர்தான் பாரதிராஜா என்பது இங்கே நினைவுகூறப்படவேண்டியது.

ஒரு ஆண் மகன் தன் காம இச்சைக்கு ஒரு பெண்ணை அழைப்பது மிக பெரிய தவறு இல்லையா ?

திரைப்பட வாய்ப்புகளை பொறி ஆக்கி அவளுடைய பெண்மையை நுகர துடிப்பது படுபாதக செயல் இல்லையா?

அந்த ஆண்களின் ஆணாதிக்க தடித்தனத்தை, "புதுமை பெண் " என்ற பெண்ணுரிமை காவியத்தை படைத்த பாரதிராஜா கண்டிக்காதது ஏன்?

"புதுமை பெண் " திரைப்படத்தில் சிறையில் இருக்கும் தன் கணவனை மீட்கும் போராட்டத்தில் தன்

பெண்மையை விலை பேச துடிக்கும் கயவர்களிடம் அந்த நாயகி போராடுவாளே ?

இதையெல்லாம் காட்சி படுத்தி விருதுகள் வாங்கி குவித்த பாரதிராஜா ஸ்ரீ ரெட்டி ஒப்பு கொண்டுதான் சோரம் போனார் என்று முரண்படுவதேன்?

என்றுதான் மகாகவி  பாரதி கண்ட சம தர்ம சமுதாயம் அமையும் ?

விடை அளிக்குமா இந்த சமூகம்

என்பதே உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் கேள்வியாய் , நெருப்பாய் பூத்து எழுகிறது

Monday, October 29, 2018

வைரமுத்து - சில கடந்த கால பார்வைகள்


கவிஞர் நா . காமராசன் தன் கவிதை ஓன்றில்

"அன்னை தமிழே என் ஆவி கலந்தவளே

என்னை வளர்பவளே என்னுள் வளர்பவளே"

என்று எழுதி இருப்பார்.

அந்த கவிதை ,

தமிழ் மொழி மீது  தணியாத பற்று கொண்ட ஒரு தமிழனின் ,

உண்மையாக நெஞ்சம் வளர்த்த ஒரு கவிஞரின்,

இதழ்களில் இருந்து அல்லாமல் இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள்.

அதனால்தான் பருக்கை அளவு கூட செருக்கை அனுமதிக்காமல் அமைந்துள்ளது
.


ஆனால் வைரமுத்துவோ, இதுவரை தமிழ் எனக்கு சோறு போட்டது.

இனி தமிழுக்கு நான் சோறு போடுவேன் என்கிறார் கர்வத்துடன்.

தமிழ் தாய் என்ன பட்டினியாகவா இருக்கிறாள்?

அதுமட்டுமா ?  ஒரு பத்திரிகையின் நேர்காணலில்,

என் கவிதைக்கு நேர்ந்த நட்டத்தை நான் உணர்கிறேன்.

 

தன் இசைக்கு நேர்ந்த நட்டத்தை இசைஞானி இளையராஜா தான் உணரவேண்டும் என்கிறார் வைரமுத்து.

ஓரே நேரத்தில் தான் அல்லாத மற்ற கவிஞர்களையும்

இசைஞானி இளையராஜா  அல்லாத மற்ற இசை அமைபாளர்களையும் மட்டம் தட்டும் போக்கை வேறு எவரிடமும் காணமுடியாது.

 

இந்தியன் திரைபட விழாவில் , பேசும்போது பட்டி மன்ற விழாவில்

தன்னையும்  கவிஞர் வாலி யையும் விமர்சனம் செய்தால் நடப்பதே வேறு என்று மிரட்டிய செயல்.

இவரும் வாலி யும் பெண்களை பற்றி இழிவாக எழுதுவார்கள்.

இதன் எதிர் வினையாக எழுத்தாளர் பாமரனும் , பட்டி மன்ற பேச்சாளர்களும்  இந்த போக்கிற்கு எதிராக குரல் கொடுத்தால் இவர் மிரட்டுவார். இதென்ன நியாயம்?

 

திரைபட பாடல் அசிரியர் சிநேகன் தன் பேட்டிகளில்,

தான் வைரமுத்துவின் உதவியாளராய் இருந்ததையும், தனியாக பாடல் எழுத முற்பட்ட போது மிரட்ட பட்டத்தையும்  பலமுறை பதிவு செய்துள்ளார்.

 

ஜெயகாந்தன் அவர்கள் காலமான பின்பு , குமுதத்தில் வெளியாகிகொண்டிருந்த வைரமுத்துவின் சிறுகதைகள் குறித்து அவரின் பாராட்டுரை என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.

அடுத்த குமுதம் இதழில்,

 

"என் தந்தை கடைசி மூன்று மாத காலம் படுத்த படுக்கையாக இருந்தார்.

அவரால் பேசவோ எழுதவோ முடியாது.

இந்த நிலையில் வைரமுத்துவிற்கு எப்படி பாராட்டுரை வழங்கி இருப்பார்?

வைரமுத்துவிற்கு எதற்கு இந்த விளம்பர மோகம் ?"

என்று ஜெயகாந்தனின் மகள் கண்டனம் செய்திருந்தார்.

 

Friday, October 26, 2018

சுனாமி அலைகளில் - ஹைக்கூ


நூற்றி முப்பத்திமூன்று அடி திருவள்ளுவர் சிலை

சீறி எழுந்த சுனாமி அலைகளில்

இனப்படுகொலையின்  அசரீரி ஒலிகள்

 

அந்த கிராமத்தில் பௌர்ணமி நிலவொளியில்

நலம் விசாரித்து கொள்கிறார்கள்

லூர்து மாதாவும் முத்து மாரி அம்மனும்

 

அடை மழைக்கு பின் வெளி வாங்கிய வானம்

அந்த கிராமத்து  வீடொன்றில்

துக்கம் கேட்டுவிட்டு திரும்பும் அவன்

 

ஒவ்வொரு அக்டோபர் மாத மழையும்

நினைவுபடுத்துகின்றன

அம்மாவோடு தீபாவளி கொண்டாடிய நாட்களை

 

பரபரப்புக்களுக்கு நடுவே

துறவியின் மௌனம்

மாநகரின் நடுவில் ஓடும் ஆறு

 


My poem video - Farmer's voice


Thursday, October 18, 2018

புதையல் பதிவின் தொடர்ச்சி



நான் 1980 மற்றும் 1986 க்கு இடைப்பட்ட வருடங்களில் மணப்பாறையில் உள்ள புனித மரி அன்னை துவக்க பள்ளியில் படித்து கொண்டிருந்த காலமது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiErL-rv8PKypGfxVPP6kzcjO6Us8IaULeJZ7ZjCGCyoR3DeLT9b2bmo6COvhC_cO7wD7FsgXJPmAmNB3gsQeuls603NHlut7qHzFQ45RpUHaxzjdKjhG_zc56AKZ70MXdaWPxZ_F0/s640/1.jpg


 


 


பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்காக ஆசிரியை ஒருவர் திரைப்பாடல் மெட்டில் எழுதிய பாடல்கள் இரண்டு.


 


ஓன்று இந்திய சுதந்திர போராட்டத்தை குறிப்பது.


 


மற்றொன்று இயேசு நாதரை வணங்கி பாடும் பக்தி பாடல்.


 


அந்த நோட்டை பல வருடங்கள் பாதுகாத்து வைத்திருந்தேன்.


 


தற்போது என் கண்களுக்கு தட்டுப்படவில்லை. 


 


அந்த நோட்டை நான் கண்டெடுக்கும் வரையில் என்  நினைவில்


உள்ள வரிகளையே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4uhv5IHQrHx1ZUp5RZyhYRW7pHm4o21EZUzJFMvPtfVN0AAbPPIKYTlujuObqRuLS6-AHYrELuuI5EMUqQCXzghXyoRG7MjFWDeySV0dVpWJfcMgxAMBmeVbz1710EDBJzFKOKZ6y/s640/2.jpg


 


கவிஞர் மனுஸ்ய புத்திரனை ஒரு இஸ்லாமியர் என்று முத்திரை குத்தி அவரது கவிதை பணியை கொச்சை படுத்தும் இத்தருணத்தில்,


இந்த பாடல்களை எழுதிய ஆசிரியையின் பெயர் நூர்ஜஹான் என்ற தகவலை தெரிவிப்பதன் மூலம் இஸ்லாமியர்கள், சமூகத்தின் அனைத்து வகுப்பினரிடமும் நல்லிணக்கத்தை பேணவே விரும்புகின்றனர் என்ற செய்தியை இந்த சமூகத்திற்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


மேலும் இஸ்லாமிய சமூகத்தின் தேச பக்தி மறக்க பட்டதல்ல . அது திட்டமிட்டே மறைக்க பட்டது என்பதும் உறுதி.


அந்த பாடல்கள்  ...


 


(அடி என்னடி ராக்கம்மா  (பட்டிக்காடா பட்டணமா) திரைப்பாடல் மெட்டு)


சொல்லடா தம்பி நம் பண்பாட்டு பெருமை


இந்நாளில் மயங்கியது


நம் முன்னோரின் சீரற்ற வேற்றுமை மயக்கம்


நம் தேசம் கலங்கியது


வந்தானே வெள்ளையன் கையேந்தி அந்த வரவுக்கு


இடம்தந்தது.


 


 


(வாழும் வரை போராடு (பாடும் வானம்பாடி) திரைப்பாடல் மெட்டு)


 


அன்பின் இறைவா போற்றி வாழ்த்தி வணங்கிடுவோமே


((((((தற்போது என் கண்களுக்கு தட்டுப்படவில்லை. 


 


அந்த நோட்டை நான் கண்டெடுக்கும் வரையில் என்  நினைவில்


உள்ள வரிகளையே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.))))


அண்மையில் என் சொந்த ஊரான மண்ணச்சநல்லுருக்கு சென்ற போது  நான் பாதுகாத்து வைத்திருந்த என் ஆரம்பப்பள்ளி நாட்களின் குறிப்பேட்டை கண்டு அடைந்தேன் .


அதன் SCANNED COPY மற்றும் கணிப்பொறி உதவியுடன் எழுதப்பட்ட பிரதியையும் இணைத்துள்ளேன்


“அடி என்னடி ராக்கம்மா” திரைப்பாடல் மெட்டு  
பல்லவி
சொல்லடா தம்பி நம் பண்பாடு பெருமை
எந்நாளில் உறங்கியது
நம் முன்னோரின் சீரற்ற வேற்றுமை மயக்கம்
நம் தேசம் கலங்கியது
(சொல்லடா)
சரணம்-1
வந்தானே வெள்ளையன் கையேந்தி
அந்த வரவுக்கு இடம் தந்தது
சொல்லாமலே நம் முன்னோரை (நம் சோதரரை) பிரித்து வைத்து
பெரும் சூழ்ச்சியில் வீழ்த்தியது
நம்மோடு நம் மோதி நமக்கழிவை
தந்து துண்டாக்கி சிதறியது
நம் மானம் நம்ரோசம் நம்வீரம்
அது எல்லாமே மண் மூடித்தூங்கியது
(சொல்லடா)
சரணம்-2
அண்ணல் நம் காந்தியாம் தேசப்பிதா
அவர் அகிம்சை வழி வந்தது
ஒன்றாகி எல்லோரும் ஓர் குரலில்
சுதந்திரம் வேண்டியது
நாடெங்கும் ஒன்றாகி வீறு கொண்டார்
நம் மாவீரம் ஓங்கியது
அந்நேரம் எந்நாளும் எல்லோரும்
நம் நாடெங்கும் போராட்டம் துவங்கியது
(சொல்லடா)
சரணம்-3
பல்வேறு தியாகங்கள் பல செய்தார்
நம் அடிமை தளை வீழ்ந்தது
மூவண்ண  தாய் மணிக்கொடி  ஏந்தி
நம் சுதந்திரம் வாங்கியது
இந்நாளில்தான் கைக்கொட்டி வாழ்த்திடுவோம்
நல் உறுதியும் தான் வந்தது
திக்கெட்டும் தேன்கொட்டும் பரவட்டும்
நம் சந்தோசம்
இந்நாளில் பெருகியது
 
 

 
 “வாழும் வரை போராடு” எனத்தொடங்கும் “பாடும் வானம்பாடி”
என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்
இறை வணக்க பாடல்
பல்லவி
அன்பின் இறைவா போற்றி
வாழ்த்தி வணங்கிடுவோமே
எந்நாளுமே நம் வாழ்விலே
உம்மை போற்றி துதித்திடுவோம்
(அன்பின்)
சரணம்-1
காரிருள் நீங்கும் காலை பொழுதே
உம்மை வணங்கிடுவோம்
நல்லோர் மனதில் கோவில் கொண்டாய்
இறைவா போற்றிடுவோம்
இறைவா நீர்
அருள் தாரும்
எந்நாளும் வாழ்த்துவோம்
 
 
 
(அன்பின்)
சரணம்-2
உந்தன் வரவால் எங்கள் வாழ்வு
என்றும் மலர்ந்திடவே
தீமைகள் நீங்கி நன்மைகள் பெற்று
என்றும் வாழ்ந்திடவே
இறைவா நீர்
அருள் தாரும்
எந்நாளும் வாழ்த்துவோம்
போற்றுவோம்