Translate

Showing posts with label அறிஞர் அண்ணா. Show all posts
Showing posts with label அறிஞர் அண்ணா. Show all posts

Wednesday, September 25, 2013

ஒடுக்கபட்டவர்களிடமும் ஒடுக்கபட்டவள் பெண்

சில ஆண்டுகளுக்கு முன்னர் தினமணி கதிர் இதழில்
புதுவை பல்கலை கழக நாடகத்துறை பேராசிரியை
ஒருவரின் நேர்காணலை வாசிக்கின்ற வாய்ப்பு
கிடைத்தது.


அவருடைய நேர்காணல் பெண்ணியம் சார்ந்த என்
பார்வைகளை கூர்மை படுத்த உதவியது.


அவர் சொல்கிறார் இந்த சமூகத்தில் கடை கோடி
பிரிவில் (ஜாதி ரீதியாக ,மற்றும் பொருளாதார ரீதியாக)
இருக்கும் ஆண் மகன் கூட தன மனைவியை
அடிமை படுத்தியே வைத்திருக்கிறான்.

இதற்கு அவர் இல்லக்கியத்தில் இருந்து உதாரணம்
தருகிறார்

அறிஞர் அண்ணா அவர்கள்,உணவு விடுதி
பணியாளர் பற்றி எழுதிய சிறுகதையில்
இந்த சமூக அநீதியை பதிவு செய்கிறார்.


அந்த சர்வர் தன் வாடிக்கையாளர் சிலரால்
அதிகாரம் செய்யபடுகிறார்.

அதன் எதிர்வினை மனைவியையே தாக்குகிறது.


மேலும் அந்த பேராசிரியை தன் எழுதிய நவீன நாடகம்
ஒன்றில் வரும் பாடலில் இந்திய பெண்மையின்
அடையாளம் கூறித்து பின்வருமாறு பதிவு செய்கிறார்

ஐந்து பேர் கற்பழித்த போது
பத்மினியாய் துடித்தது
தீயிட்டு கொளுத்திய போது
ரூப்கன்வராய் எரிந்தது


மேலும் இது குறித்த தொடர் சிந்தனையில்
இந்த சமூகத்தில் யார் நல்லவர்கள் ஆணா?
பெண்ணா என்பதல்ல கேள்வி
யார் யாரை ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே கேள்வி
உதரணத்திற்கு ஒரு பெண் கெட்டவள் ஆக இருப்பதாக
கொண்டாலும் அவள் தன் மகளுக்கு மாப்பிள்ளையிடம்
இருந்து வரதட்சனை கேட்கமுடியுமா?

ஆண் மகனை உயர்த்தி பெண்ணை தாழ்த்தும்
சிந்தனைகளும்,நடைமுறைகளுமே ஆணாதிக்கம்.

அதுவே பெண் இனத்திற்கு முட்டுக்கட்டை
இந்த முட்டுக்கட்டைகளை உருவாகியதும் ஆண் வர்க்கமே.

இந்த புரிதலும் போராட்ட முன் எடுப்புமே
பெண் விடுதலையை பெற்றுத்தரும்.