Translate

Saturday, November 21, 2015

மனம் போல வாழ்வு

கவிதைக்குத்தான் இரண்டு பொருள் கொள்ள முடியும் என்று சொல்வார்கள் .
எடுத்துக்காட்டாக ,
கற்க கசடற கற்பவை கற்ற பின் 
நிற்க அதற்கு தக 
என்ற குறளுக்கு ஐயத்திற்கு இடம் 
இன்றி எதையும் கற்க வேண்டும் .பின்பு கற்ற படி நடக்க வேண்டும்
என்பதே நம் பள்ளி நாட்களில் தமிழ் ஆசிரியர்கள் நமக்கு 
கற்பித்தது.
ஆனால் இதே குறளுக்கு இசைஞானி இளையராஜா சிந்திக்கும் 
பொருளே வேறு மாதிரி உள்ளது.
கசடற என்றால் கெட்ட செய்திகளை படிக்க கூடாது .
நல்ல செய்திகளை மட்டுமே கற்று அதன்படி நடக்க வேண்டும் 
என்று பொருள் கொள்கிறார் . இது அவரின் ஆன்மிக பார்வை ஆகும்.
இதைபோலவே ,
மனம் போல வாழ்வு  என்ற வாழ்த்து வாக்கியத்தை இரண்டு 
விதமாக நான் பொருள் கொள்கிறேன்.
நம் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் அதன்படி நல் வாழ்க்கை அமையும்
என்பது ஒரு பொருள்.
நமக்கு இந்த வாழ்கையில் எல்லாம் கிடைத்து விட்டது என்று நேர்மறையாக
சிந்தித்தால் அதன்படி மகிழ்ச்சியான வாழ்வு 
எதிர்மறையாக நான் நினைத்தது எதுவும் கைகூட வில்லையே என்று 
உள்ளம் குமுறி கொண்டே இருந்தால் வேதனையான வாழ்வு.

No comments:

Post a Comment