Translate

Monday, January 19, 2015

படைப்பாளியின் மதம்

என் பள்ளி நாட்களில் ஒரு நாள் வானொலியில் கவிஞர் மு.மேத்தா எழுதிய

"காலம் பொறந்திடுச்சு சின்ன மயிலே" என 
தொடங்கும் பாடல் ஒலித்து கொண்டிருந்தது.
அந்த பாடலில், 
அஞ்சுகின்ற முகத்தை  காண்பதற்கு ஆறுமுகம் கூட 

வருவதில்லை
நெஞ்சமெனும் அடுப்பில் நெருப்பிருக்கு
வஞ்சகரின் உலகில் பயமெதற்கு?
என்ற வரிகளை கேட்ட என் தந்தை ,
அவரு (கவிஞர் மு.மேத்தா) பாய் அதான் இப்படி எழுதி இருக்காரு என்று 
சிரித்துகொண்டே கூறினார்.
கவிஞரின் பாடல் வரிகளுக்கு மத சாயம் பூசிய வார்த்தைகளை கேட்டவுடனேயே
நான் கவிஞர் .சிற்பியின் கவிதை ஒன்றை குறிபிட்டு என் தந்தைக்கு சட்டென்று
 பதில் தந்தேன்
கவிஞர் சிற்பி தன் கவிதை ஒன்றில் இராணுவத்தினரால் பாலியல்
வல்லுறவிற்கு ஆளான பெண்ணின் வேதனையின் உச்சத்தை பதிவு செய்வதற்கு,
"அருளாளனும் அன்பாளனுமாகிய அல்லா தலை குனிந்து கொண்டான்" என்று எழுதினார்

 இங்கே கவிஞர் சிற்பி பாதிக்கப்பட்ட பெண்ணின் வேதனையை
அல்லாவால் தாங்கமுடியவில்லை என்ற பொருள் படவே  அவ்வாறு
தன் கவிதையில் எழுதியுள்ளார்.
அதைப்போலவே கவிஞர் மு.மேத்தாவும் அச்சம் கொள்ள கூடாது.
துணிந்து போராடினாலே தெய்வம் துணை நிற்கும்.
என்ற கருத்தை பதிவு செய்வதற்கே அவ்வாறு எழுதியுள்ளார்.
இதில் மேத்தாவை இஸ்மாயிலர் என்றோ சிற்பியை ஹிந்து  என்றோ
அடையாள படுத்துவது அபத்தத்திலும் அபத்தம்.
மதமேதும் இல்லாமல் இருப்பதே படைப்பாளியின் மதம்.

No comments:

Post a Comment