Translate

Tuesday, January 27, 2015

இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு - ஒரு பாராட்டு ,

ஒரு பாராட்டு


சில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை செய்தி
என்னை பரவசத்தில் ஆழ்த்தியது.
அந்த செய்தி ....
ஒரு இளம்பெண் காரில் தனியே பயணம் செய்து கொண்டு 
இருக்கும் போது அவரை தொடர்ந்து வந்த வாகனம்
மிகவும் வேகமாக வந்த தோடு மட்டும் இல்லாமல்
மோதியும் விடுகிறது.
அந்த வாகனத்தில் வந்த மனிதர் தன் தவறை
உணராமல் 
அந்த இளம் பெண்ணை மிகவும் இழிவாக பேசிவிட்டு
ஆணாதிக்க மமதையுடன் தன் வாகனத்தை ஒட்டிக்கொண்டு 
செல்கிறார்.
அந்த இளம் பெண்ணுக்கோ சுயமரியாதை காய முற்றதன்
விளைவாக கடும் கோபம் வருகிறது.
அந்த வாகனத்தை துரத்தி கொண்டே செல்கிறார்.
பின்னால் துரத்தி வரும் பெண்ணை பார்த்து 
அந்த மனிதர் பயந்து விடுகிறார்.
அந்த மனிதர் சென்ற வண்டி இப்பொழுது
ஒரு காவல் நிலையத்தின் வாசலில் போய்
நிற்கிறது.
வேகமாக வண்டியில் இருந்து குதித்தவர் 
காவல் நிலையத்திற்குள் சென்று விடுகிறார்.
இப்பொழுதும் அசராத  அந்த பெண் தானும் காவல்
நிலையத்திற்குள் சென்று அந்த மனிதரை தேடுகிறார்
அங்கு சென்ற பின்பே அவர் காவல் துறையில்
ஒரு உயர் பதவி வகிப்பவர் என்பது தெரிகிறது.
அவரின் உயர் பதவிக்கும் அஞ்சாத அந்த பெண்,
பெண்கள் குறித்து நீங்கள் சொன்ன இழிவான
சொற்களுக்கு மன்னிப்பு  கேட்டே ஆக வேண்டும்
என்று போராடுகிறார்.
இதுவரையில் 
ஆணாதிக்க சூழலிலேயே வாழ்ந்து வந்த அந்த 
மனிதனால் ஒரு பெண்ணிடம் எப்படி மன்னிப்பு 
கேட்பது என்ற வறட்டு கெளரவம் தடுத்தது.
கடைசியில் தன் போராட்டத்தில் வென்ற பின்பே 
அந்த பெண் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
இந்த செய்திகள் எல்லாம் பத்திரிகை வாயிலாக நான்
அறிந்தவை.
அந்த பெண் வேறு யாருமில்லை.
திரு.அகத்தியன் அவர்களின் மகள்தான்.
தன்னுடைய மகளை இவ்வளவு துணிச்சலாக
வளர்த்த திரு.அகத்தியன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

No comments:

Post a Comment